விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்!

“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்” என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது. பாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ‘தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்’ என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது.

(“விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு டிவி நிகழ்ச்சி… ஒரே இரவில் ‘ஜோக்கர்’ ஆன ‘டொனால்ட் ட்ரம்ப்’!

அரசியல் – உலகின் பழமையான தொழில்; ஆனால் அதன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல. பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் உலகெங்கிலும் வேறுபட்டுத் தெரிந்தாலும், மனிதனின் அடைப்படை மனோபாவம் மாறுவதில்லை. வெகுஜனங்களைப் பொறுத்த வரையில் அது இரண்டு பிரிவுகளின் கீழ் வகுக்கப்படுகிறது. அவை முறையே, நாம் ஆளப்படவேண்டியவர்கள் என்பதும், நாம் ஆள வேண்டியவர்கள் என்பதுதான்.

(“ஒரு டிவி நிகழ்ச்சி… ஒரே இரவில் ‘ஜோக்கர்’ ஆன ‘டொனால்ட் ட்ரம்ப்’!” தொடர்ந்து வாசிக்க…)

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை உள்ளூராட்சி தேர்தலை உறுதி செய்ய முடியாது

எல்லை நிர்ணயம் குறித்த மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கும்வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான இயலுமை இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான வட்டாரங்கள் அமைக்கப்படாத நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நல்லாட்சி அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணைக்கு விரோதமானது என்றும் கூறினார்.

(“எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை உள்ளூராட்சி தேர்தலை உறுதி செய்ய முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

மியன்மார் ஜனாதிபதியாவதற்கு சூகிக்கு தடை

மியன்­மாரின் ஜனாதிபதியாவதற்கு ஆங் சான் சூகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனா­தி­பதி பெயர் பட்­டி­யலில் சூகியின் முன்னாள் சாரதி ஹ்தின் க்யாவ் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­கான போட்­டியில் இதுவரை இருவரின் பெயர்கள் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நாடா­ளு­மன்றம் இந்த வாரம் தெரிவு செய்யும். இரா­ணுவத்தின் அரசியமைப்புச் சட்­டத்­தின்­படி, உயர்­ அ­ர­சியல் பொறுப்பு வகிக்க, தேசிய ஜன­நா­யக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்குத் தடை­ விதிக்­கப்­பட்­டுள்­ளது.

(“மியன்மார் ஜனாதிபதியாவதற்கு சூகிக்கு தடை” தொடர்ந்து வாசிக்க…)

சாதிவெறியும் புலிகளும்

இந்திய இராணுவ யுத்தம் முடிந்த பின் சில வசதி அற்ற ஏழைகள் இந்திய இராணுவம் ,இந்திய செஞ்சிலுவைச் சங்கம் வழங்கும் உணவுப்பொருட்களை வாங்கி வாழ்வைக் கழித்தனர்.இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை புலிகள் உணவு வாங்கி உண்ட ஒரே காரணத்துக்காக சுட்டுக் கொன்றனர். அளவெட்டியில் வடக்குப்பகுதி இந்திய உணவு வாங்கி உண்ண அனுமதிக்கப்பட்டனர்.தெற்குப் பகுதியில் அனுமதிக்கவில்லை .காரணம் சாதி ஒன்றே.
தெல்லிப்பழை மதி, நெல்லியடி சுக்லா இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை காரணமின்றி அடித்தனர்.பின்னாளில் இளம்பருதியும் சேர்ந்து கொண்டார்.

(“சாதிவெறியும் புலிகளும்” தொடர்ந்து வாசிக்க…)

எமது கிராம போராட்டத்தின் பின்

போராட்டத்தில், பலியான இரத்தினம் அவர்களுக்கு குழந்தை இல்லை.அவர் மனைவி இளம் வயதில் விதவையானார்.மீண்டும் மணம் முடிக்காமல் வெள்ளைப் புடவையுடன் விதவையாகவே வாழ்ந்தார்.அவரனது அண்ணனும் தங்கையுமே பக்க பலமாக இருந்தார்கள்.திடீரென விரக்தியுற்ற அவர் 1996 இல் தற்கொலை செய்துகொண்டார் .

(“எமது கிராம போராட்டத்தின் பின்” தொடர்ந்து வாசிக்க…)

அஞ்சலி: கலாபவன் மணி – “அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!”

(பனிமலரோன்)
பணம், செல்வாக்கு இருந்தாலும் இங்கிதமாகப் பழகுபவர்களை டவுன் டு எர்த் பெர்சனாலிட்டி என்பார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் நடிகர் கலாபவன் மணி. பழசை மறக்காத பக்குவம் அவரிடம் கடைசிவரையில் இருந்தது என்பதற்கு அவர் இறந்ததும் சாலக்குடியில் திரண்ட மக்கள் கூட்டமே சான்று.  கலாபவன் மணி இருநூறு தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறார். கேரள மாநிலம் தாண்டி, மதுரையில், கலாபவன் மணி ரசிகர்கள் மன்றம் இருக்கிறது. மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் போன்ற நகரங்களிலிருந்து ரசிகர்கள் கலாபவன் மணிக்கு இறுதி மரியாதை செய்வதற்காக சாலக்குடி வந்திருந்தது சாலக்குடி மக்களையும் மலையாளப் பட உலகையும் ஒருசேர நெகிழச் செய்தது.

எடுபிடி வேலையாளாக இருந்த மணி ஆட்டோ டிரைவராகி, மிமிக்கிரி கலைஞனாகி, பின் நடிகர் ஆனவர். கடைசி வரையில் மிமிக்கிரியை மூச்சாக சுவாசித்தவர். வறுமை காரணமாக, பதினெட்டு வயதிலும், மணி மிக ஒல்லியாக இருப்பார். மிமிக்கிரி பயிற்சிக்காக மணி, கொச்சியிலுள்ள ‘கலாபவன்’ பயிற்சி நிலையத்துக்கு வந்தார். தேர்வில், மணி ‘அழைப்பு மணி’யின் ஓசையை மிமிக்ரியில் உருவாக்கினார். அதில் ஈர்க்கப்பட்ட கலாபவன் பொறுப்பாளர், மணியை கலாபவனில் சேர்த்துக்கொண்டார்.

அன்று முதல், ‘கலாபவன் மணி’ ஆனார். நடனம், இசை, நாடகம், மிமிக்கிரி, பாட்டு போன்ற கலைகளைச் சொல்லித்தரும் நிறுவனம் கலாபவன். இயக்குநர்கள் சித்திக், ஹனிபா, நடிகர்கள் ஜெயராம், திலீப், பாடகிகள் சுஜாதா, ஜென்சி ஆகியோர் கலாபவனில் பயிற்சிபெற்றோரில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தொடக்கத்தில் மணிக்குச் சிறு சிறு காமெடி வேடங்கள்தான் கிடைத்தன. 1999-ல் வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் சாயல் கொண்ட ‘வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்’ படம் மணியின் நடிப்பில் புதிய பரிமாணத்தைச் சேர்த்தது. மாநில, தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளும் மணியைத் தேடி வந்தன. ஆனால் மணிக்குப் பிடித்த படம் ‘ஆகாசத்திலே பறவகள்’.

கலாபவன் மணி சமையலில் நளன். அஜித் மாதிரி, ஷூட்டிங் சமயத்தில் சமைத்து எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துவார். ஷூட்டிங் நடக்கும்போது, மணி தங்கும் அறையில் அவர் ஓட்டுநரும் உதவியாளரும் பெட்டில் படுத்து உறங்குவார்கள். அவரோ தரையில் பெட்ஷீட் விரித்துக் கிடப்பார். கேட்டால், “இவங்க வீட்டில் இத்தனை வசதி இருக்காது. இங்கேயாவது அனுபவிக்கட்டும்…” என்பார்.

மார்ச் 7 சிவராத்திரி அன்று மணியின் மிமிக்கிரி நிகழ்ச்சி சாலக்குடி அருகே ஒரு கிராமத்தில் ஏற்பாடாகியிருந்தது. வரவேற்பு பேனர்களை மாற்றி, “இனியொரு ஜன்மம் எடுத்து கலாபவன் மணியாகவே திரும்ப வாங்க… நாங்க இல்லாமல் போனாலும் எங்க வாரிசுகளைப் பாட்டால், மிமிக்கிரியால் சந்தோஷப்படுத்துங்க” என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட நெகிழ்ச்சியான அஞ்சலி இருக்குமா?
அதிகம் பாடல்கள் பாடி நடித்திருக்கும் பெருமையும், ‘த கார்டு’ (The Guard) முழுநீளத் திரைப் படத்தில் ஒற்றைக் கதாபாத்திரமாக நடித்த பெருமையும் மணிக்கு உண்டு. சில தொழில்நுட்பக் காரணங்களால் அது கின்னஸில் இடம்பெறவில்லை.

திக்கித் திக்கிப் பேசி ‘ராட்சஷ ராஜாவு’ படத்தில் வில்லனாக மிரட்ட, ‘ஜெமினி’ படத்தின் வில்லன் ஆனார். அதில் விலங்குகளின் உடல்மொழியில் மிரட்டினார். தொடர்ந்து, வில்லனாகத் தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் ஒரு சுற்று வந்தார்.
மணியின் ‘உடல் மொழி’ அபாரமானது, அசாதாரணமானது. புருவம், கண், உதடுகள், மூக்கு, கன்னம், கை, கால் எல்லாமே நடிக்கும். கவர்ந்திழுக்கும் குரல் மாடுலேஷன் மணிக்குச் சொந்தம். பேச்சில் சாதுர்யம். டான்ஸிலும் அசத்துவார். நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில், மணிக்கு நிகர் மணிதான். “மேடை என்பது எனக்கு ‘ஓணப் பண்டிகை ஸத்யா’ (மதிய விருந்து) மாதிரி. திருப்தி வரும்வரை விட மாட்டேன். ரசிகர்களைத் திருப்திப்படுத்தாமல் மேடையை விட்டு இறங்கவும் மாட்டேன்” என்பார்.

மணி வீட்டிலிருந்தால், கொண்டாட்டம்தான். அதுவும் பழைய நண்பர்கள் வந்துவிட்டால், பொழுதுபோவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். நண்பர்கள் கிளம்பும்போது, அவர்கள் அன்று வேலை செய்திருந்தால் என்ன சம்பளம் கிடைத்திருக்குமோ அதைவிட இரண்டு மடங்கு கொடுத்து அனுப்புவார்.

ஒருமுறை, முன்பணம் கொடுக்க இயக்குநர் ஒருவர், மணியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரிடமிருந்து வாங்கிய முன்பணத்தை அப்படியே அங்கேயிருந்த ஒரு அம்மாவிடமும் இளம்பெண்ணிடமும் எண்ணிக்கூடப் பார்க்காமல் கொடுத்துவிட்டார் மணி. அந்த இளம் பெண்ணின் திருமணத்துக்கான உதவி அது. சாலக்குடியில், தன் தந்தை நினைவாக ஒரு நூலகம் கட்டியுள்ளார் மணி. பள்ளிகளுக்கும், அரசு மருத்துவமனை, காவல் நிலைய பராமரிப்புக்கும் கணிசமான தொகையையும் தந்திருக்கிறார் அவர்.

சாலக்குடி சாலைகளைச் செப்பனிடவும் விசால மனசு கொண்ட மணி மறக்கவில்லை. சொந்த ஆட்டோ, பைக், கார் ஆகியவற்றுக்கு எண் ‘100’ என்றுதான் வைத்திருந்தார். ஆனால் 45 வயதில் காலமாகிவிட்டார்.  கலாபவன் மணி இறந்ததும் மலையாள முன்னணி நடிகர்கள் பலர், அவரை ‘ஆஹா, ஓஹோ’ என்று பாராட்டி இரங்கல் தெரிவித்திருந்தார்கள். ஆனால். கலாபவன் மணியின் திறமையை அவர் உயிருடன் இருந்தபோது அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. “ஒரு கலைஞனுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு மரணம் அவசியம்… அவன் மரணம் அடைந்த பிறகுதான் அங்கீகாரம் கிடைக்கும்… நான் இறந்த பிறகு, என் எதிரிகள்கூட என்னைப் பாராட்டுவார்கள்” என்று கலாபவன் மணி அடிக்கடி சொல்லி வந்தார். அது பலித்தேவிட்டது.

சிரிய அகதிகள்: அடுப்புக்கும் பானைக்கும் நடுவே

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அகதி வாழ்வின் அவலம் சொல்லி மாளாது. போரின் முதற்பலி, உண்மை. ஆனால், அதன் இறுதிப் பலி அகதி. வீடு திரும்ப இயலாது, அந்நிய மண்ணில் அலைதலே வாழ்க்கையாகி, நிச்சயமின்மையே நிச்சயமாகிவிடும் துயரத்தை யாரிடம் சொல்ல முடியும். அகதி என்ற அடையாளம் அனைத்தையும் அழித்துத் துடைத்துவிட்ட பின், வாழ்க்கை என்னவோ திரிசங்கு நிலைதான். சிரியாவிலும் சூழவும் ஏற்பட்டுள்ள போரும் பேரழிவும், பல இலட்சக்கணக்காணோரை அகதிகளாக்கியுள்ளன. மத்திய-கிழக்கு, வட-ஆபிரிக்க நாட்டவர்கள் தங்கள் உயிர்களைக் காப்பதற்காகச் சொந்த இடங்களிலிருந்து பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். அவர்களிற் பெரும்பாலோர் சிரியாவைச் சேர்ந்தவர்கள்.

(“சிரிய அகதிகள்: அடுப்புக்கும் பானைக்கும் நடுவே” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா?

(சாகரன்)
“….தொடர்ந்தும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா? அவர்கள் இலங்கை நாட்டுக்குரியவர்கள். அவர்கள் இலங்கைத் தமிழர்களாகக் கொள்ளப்படுதல் வேண்டும். அதற்கு வடகிழக்கு தமிழர்கள் என்ன கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிய ஆவலாக உள்ளேன்……” – அநுரகுமார திஸநாயக்க ( எதிர்கட்சி பிரதம கொறடா, தலைவர் JVP)

(“இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா?” தொடர்ந்து வாசிக்க…)

ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒப்புக்கொண்டார்! – சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று அன்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நோர்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் சொல்ஹெய்ம். அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மார்க் சால்டர் என்பவர், 549 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். “To End A Civil War” என்ற பெயரில் அந்த நூல் வெளியாகியுள்ளது. அந்த நூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தனக்கு இருந்த தொடர்புகள், பாலசிங்கம், பிரபாகரன் உள்ளிட்டோர் குறித்து விவரித்துள்ளார் சொல்ஹெய்ம்.

பாலசிங்கத்துக்கே தெரியாமல் சொல்ஹெய்ம் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை குறித்து பாலசிங்கத்திடம் முதலிலேயே தெரிவிக்கவில்லை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன். ராஜீவ் காந்தி மே 21, 1991ல் கொல்லப்பட்டார். அதன் பிறகு சில வாரங்கள் கழித்தே பிரபாகரனும், பொட்டு அம்மானும், பாலசிங்கத்திடம் விவரத்தைக் கூறியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை குறித்து நான் பின்னர் பாலசிங்கத்திடம் கேட்டபோது, விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த மிகப் பெரிய தவறு இது என்று உடனடியாக ஒத்துக் கொண்டார். மிகப் பெரிய வரலாறு என்று அவர் திரும்பவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இது ஒட்டுமொத்த சீரழிவு என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை என்றும் கூறினார் பாலசிங்கம். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் அமைதிப் பணிக்காக வந்த இடத்தில் தமிழர்களைக் கொன்று குவித்தது. இந்த நிலையில் 91 தேர்தலில் மீண்டும் ராஜீவ் வென்று ஆட்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி நடந்தால் அவர் மீண்டும் படையை அனுப்பலாம். அது தங்களுக்கு பாதகமாக அமையும் என்று பிரபாகரன் எதிர்பார்த்தார். இதனால் ராஜீவ் காந்தியைக் கொல்லும் முடிவை அவர் எடுத்தார்.

சொல்ஹெய்ம் மேலும் கூறுகையில், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகளை பாலசிங்கம் ஏற்படுத்தி வந்தாலும் கூட, இந்தியா மீதுதான் அவருக்கு தனிப் பிரியம் இருந்தது. அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தை கடுமையாக விமர்சித்தவரான நீலன் திருச்செல்வத்தை விடுதலைப் புலிகள் கொன்றதை நியாயப்படுத்தினார் பாலசிங்கம். அவரைக் கொன்றது நாங்கள்தான். காரணத்தைச் சொல்ல நாங்கள் தயார். கேட்க நீங்கள் தயாரா என்று என்னிடம் பட்டென்று கேட்டார் பாலசிங்கம்.

பிரபாகரனை போர் தாகம் கொண்டவர் என்று ஒருமுறை என்னிடம் வர்ணித்தார் பாலசிங்கம். அதேசமயம், பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகள் தலைமை, தங்களது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்ற முயன்று வருவதாகவும் கூறினார். அன்டன் பாலசிங்கம் மிகவும் வெளிப்படையானவர். தவறுகளை ஒப்புக் கொள்வார். விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த பல தவறுகளை என்னிடம் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று என்னிடம் பலமுறை கூறியுள்ளார். மிகச் சிறந்த மனிதர். அவர் மீதான மரியாதை எனக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருந்தது. எனக்கு நல்ல நண்பராக இருந்தார் என்று கூறியுள்ளார் சொல்ஹெய்ம்..