கனடாவின் சுமந்திரன் இலங்கை அமெரிக்க பிரதிநிதியாக…..!

இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன். குறித்த நேரத்திற்கு நிகழ்வு ஆரம்பமானது. ஆனால் குறித்து சென்ற கேள்விகள் ஊமையாய் உறங்கிய அழுத்தம் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியது. கனடா வந்த சுமந்தரனிடம் கேள்வி கேட்க சென்ற என் போன்ற மக்களை குரல் எழுப்பி கேள்வி கேட்க விடாமல் துண்டெழுதி கேள்வி கேட்க வைத்து, படித்தது பாதி படிக்காதது பாதி, கேள்வியை திரிபு படுத்தி படித்தது பாதி, என நுனிப் புல் மேய்ந்து சாதுரியமாக பதில் என்ற பெயரில் எதையோ சொல்லி தட்டிக் கழித்து தப்பித்தார் சுமந்திரன்.

(“கனடாவின் சுமந்திரன் இலங்கை அமெரிக்க பிரதிநிதியாக…..!” தொடர்ந்து வாசிக்க…)

மோடியின் தோல்விகள்

 

சிலிக்கான் வேலியில் மோடி கிளப்பும் விளம்பரப் புழுதி, நாளிதழ்களை கறையாக்கி வருகிறது. கறையும், புழுதியும் நல்லதல்ல என்றாலும் மோடி ஆண்டையின் காலில் விழுந்து கிடக்கும் ஊடகங்கள் சலிக்காமல் பஜனையை கிளப்பி வருகிறார்கள். மோடியை புகைப்படம் பிடிப்பதிலிருந்து, ஆட்களை அழைத்து வருவது, உள்ளூர் சில்லறை மற்றும் மொத்த விற்பனை பிரமுகர்களை காட்டுவது, வசனங்களை தயாரிப்பது, ஊடகங்களில் மானே தேனே போட்டு எழுதிக் கொடுப்பவது வரை பெரும்படையே அங்கும் இங்கும் வேலை செய்கிறது. ஆனாலும் ஒரு குற்றவாளியை இப்படி வாஷிங்டன் சென்ட் போட்டு மறைக்க முடியுமா?

(“மோடியின் தோல்விகள்” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேச விசாரணை தொடர்பில் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை அதன் பின்னர் அந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்க அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு என்பன தொடர்பில் சரியான நிலைப்பாடொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டுமென அவர்களுக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள் – என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்தள்ளார்.

(“சர்வதேச விசாரணை தொடர்பில் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும் இணைத்துக் கொண்டாடி மகிழும்……

“வேரும் விழுதும் 2015” (கலைமாலை)

காலம் : 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14.00 மணி தொடக்கம்..
இடம் : Restaurant Baren sall, Bern str-25, 3072 Ostermundigen.

நிகழ்ச்சிகள்..
இயல், இசை, நாட்டியம், இசைப்பாட்டு, தாளவாத்திய விருந்து, நகைச்சுவை விருந்து, சிறப்புப் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி: “சுவிஸ் ராகம்” இசைக்குழுவின் கரோக்கி இசையில் பண்பட்ட பல கலைஞர்களின் “ராக கீதம்”, அதிரடி மேலைத்தேய நடனங்கள் (Hip Hop -ரி.யு.கே பாய்ஸ், ட்ரீம் பாய்ஸ் உட்பட பலரது..) போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள்…

(“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)..!!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை- பங்காளிக் கட்சிகள் அதிருப்தி

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க அனுசரணையிலான பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பளித்ததாக வெளிவந்த அறிவிப்பு ஏகமனதாக எடுக்கப்பட்டதல்ல என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அது ஒருமித்த கருத்தொன்று அல்ல எனக் குறிப்பிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியன தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

(“தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை- பங்காளிக் கட்சிகள் அதிருப்தி” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் எல்லா மதங்களையும் ஏற்ற ஒரு மொழி.

சமணம், பவுத்தம் , கிறித்தவம் போன்று இஸ்லாமும் தமிழை வளர்க்க செழுமைப்படுத்த உதவியுள்ளது. நாம் தமிழை போற்றுதல் எம்மதமும் சம்மதம் என்பதை போற்றுதல். இஸ்லாமூம்தமிழர்களும்[,நில்லுங்கள் இதை படியுங்கள் ,.தமிழை காத்த தமிழ் இஸ்லாமியர்கள் .
சமஸ்கிரதம் எமது தாய் மொழி யல்ல தமிழே தமிழே எந்த ஆலயத்திலும் தமிழ் வேண்டும். இந்தியாவின் மாபெரும் ஆன்மிக அறிஞர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “முஹம்மதியர்களின் வருகை ஒடுக்கப்பட்டோர் முதல் ஏழைகள் வரை ஈடேற்றம் தருவதாக அமைந்தது. இதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிமாக ஆகியுள்ளார்கள். வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. வாளும், நெருப்பும் இந்த வேலையைச் செய்தது என்று சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும். உயர்சாதி மனிதர் நடமாடும் அதே வீதியில் செல்வதற்குத் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி கொடுக்கப்படாததை நான் பார்த்தேன். ஆனால் அவன் தனது பெயரை முஹம்மதியப் பெயராக மாற்றிக் கொண்டால் இந்தச் சிக்கல் இருப்பதில்லை.

(“தமிழ் எல்லா மதங்களையும் ஏற்ற ஒரு மொழி.” தொடர்ந்து வாசிக்க…)

கடந்த கால குற்றங்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டும் – ரணில்

கடந்த கால குற்றச் செயல்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார தடைகள் விதிக்கப்படும், யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டிக்கப்படுவர் ஆகிய அச்சத்திலிருந்து நாட்டு மக்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் ஆணையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளுக்கு புலிகள் இயக்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஒரு தரப்பினர் மீது மட்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் இராணுவம் பற்றி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் இந்தக்; கருத்தை வெளியிட்டுள்ளார்.

சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் – முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் மீண்டும் அநீதி!

சட்டக் கல்லூரி அனுமதி – 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு
அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும்
பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தமிழ்
பேசும் பரீட்சார்த்திகளுக்கு திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு, அநீதி
இடம்பெறுகின்றது என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது. இவை சம்பந்தமாக பரீட்சார்த்திகள் சிலர் மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் கடந்த காலங்களில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

(“சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் – முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் மீண்டும் அநீதி!” தொடர்ந்து வாசிக்க…)

“குமுதம் ரிப்போர்ட்டர்” மற்றும் அதன் அல்லக்கைகளுக்கு இதோ இந்தப் படம் சமர்ப்பணம்…….

 

லெகின்ஸ் அணிந்து பெண்கள் பொது இடங்களில் நடக்கும் போது கலாச்சாரம் நாசாமாகி போனது என்றும்….ஜீன்ஸ், T ஷர்ட் அணிந்து பெண்கள் நடமாடுவது தான் உலகத்தில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றும் கூறி, அறிவுரைகள் கொடுக்கிறோமென்ற சாக்கில், பெண்களை பின் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தெரியாமல், அனிச்சையாக ஆடைவிலகும் நேரத்தில் படமெடுத்து அதை பத்திரிகையில் அச்சடித்து விநியோகம் செய்து கல்லா கட்டும், அலப்பரைகளுக்காகவும் அதை வாங்கிப் படித்துவிட்டு கலாச்சாரம்…கலாச்சாரம்…என்று தலைகீழாகக் குதிக்கும் அந்த பத்திரிக்கைகளின் அல்லக்கை ரசிகர்களுக்கும்….இதோ இந்தப் படம் சமர்ப்பணம்…அவனவன் வேலை என்னவோ அதை செய்யுறதவிட்டுட்டு அடுத்தவன் வீட்டு படுக்கையறையில் உற்று பாக்குறவங்களுக்கு தான் இந்தக் கலாச்சாரப் பிரச்சனை எல்லாம்…வெனிசூலாவின் முன்னாள் அதிபர் தோழர். ஹியுகோ சாவேஸ் ஜானதிபதியாக இருந்தபோது மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக ஒரு கிராமத்திலுள்ள பெண்ணுடன் உரையாடும் காட்சி…அந்தப் பெண்மணி வெகு இயல்பாக குழந்தைக்கு பாலூட்டிகொண்டே தோழர் சாவேசுடன் உரையாடுகிறார்…இதனால் தோழர். சவேசுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை…அந்தப் பெண்மணிக்கு, தன்னுடைய பெண்மை அவமானப்படுத்தப்பட்டதாக எந்த அவமான உணர்வும் இல்லை…! ஆடை அணிவதால் ஏற்படும் பிரச்சனை என்பது பார்க்கும் பார்வையிலேயே உள்ளது…!தோழர். சாவேசின் செயல்பாடு, ஒருவர் தன்னுடைய இளைய சகோதரியிடம் பாசத்துடன் காண்பிக்கும் செயல்பாடு…இதுவே கலாச்சாரம்…!அதன்றி ஆடை எப்போது விலகுமென்று காத்திருப்பதும் அல்லது ஏதாவது மறைந்து புகைப்படமெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கண்கொத்திப் பாம்பாக அலைவதுமோ அல்ல காலச்சாரம்…!

நன்றி….
படம் மற்றும் கருத்து உபயம் Sadan Thuckalai
(Kani Oviya)

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (4)

பிரச்சனையை தீர்ப்பதா அல்லது வளர்ப்பதா என்றால் அதில் தனக்கு எது லாபமோ அதைத்தான் பிரேமச்சந்திரன் செய்வார். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது தான் அவரின் வரலாறு. தமிழரசு கட்சியின் கோட்டை என கூறப்படும் கோப்பாய் கோமகன் வன்னிய சிங்கத்தின் தொகுதியில் கட்டைப்பிராயில் இருந்து பதவிக்காக இணைந்த இந்த புலியடி பயனாளி, புலிகளின் அனுசரணையிலும் பின்பு முள்ளிவாய்கால் பேரவல அனுதாபத்திலும் தான் கடந்த இரு தடவையும் பாராளுமன்றம் செல்ல முடிந்தது.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (4)” தொடர்ந்து வாசிக்க…)