‘சுமந்திரனை கேள்வி கேட்கும் இளைஞனின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியல்’

வி. சபேசன்

‘இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடந்தது’ என்ற கருத்தைத்தான் சுமந்திரன் பல முறை பேசியிருக்கிறார்.
ஆயினும் அவருடைய அரசியல் என்பது மேற்குலகின் சிந்தனையோடு ஒட்டிப் பயணிப்பதாக இருக்கிறது. பேரம் பேசும் வலு அற்ற நிலையில் தமிழர்கள் இருப்பதால், இதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவர் கருதக் கூடும். ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் ‘இலங்கையில் நடந்தது இனப் படுகொலை அல்ல’ என்று கூறி விடுகிறார்.

(“‘சுமந்திரனை கேள்வி கேட்கும் இளைஞனின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியல்’” தொடர்ந்து வாசிக்க…)

என் நண்பனே மீண்டும் எழுந்து வருவாயோ…..?

தங்கம்(ன்) என் பால்ய நண்பன். இன்றுவரை தொடரும் நட்பு. மெலிதாக பேசும் சுபாவம். என் நட்புடன் கூடவே எனது சமூக விடுதலைக் போராட்டத்திலும் என்னோடு பயணித்தவன். நான் புலம் பெயர்ந்து வேறு தேசங்களில் வாழ்ந்த போதும் தொடர்ந்து தேடித் தேடி நட்பை, தோழமையைப் பாராட்டியவன். புலம் பெயர் தேசத்தில் பண்டிகைகளை நான் மறந்திருந்போதும் வாழ்த்துக்கள் கூற என்னை தொடர்ந்து அழைத்த வண்ணம் இருந்தவன். கடைசியாக ஊருக்கு போன போதும் என் கரம் பற்றி ‘…எனக்குத் தெரியும் நீ சாமி கும்பிடுவது இல்லை….’ என்று கூறியபடி…. எனக்காக தன்னுடன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிறிய கோவிலுக்கு அழைத்துச் சென்றவன். பிரசாதத்தை தந்து இதனை ஏற்பாயா என்று அன்புடன் என்னை ஏற்க வைத்தவன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட போது உதவி கேட்டு பதிலுக்கு காணியை தருகின்றேன் என்று கூறியபோது என்னிடம் ஏச்சு வாங்கியவன். பின்பு என்னுடன் இணைந்த அவரின் நண்பர்களும், ஊரவர்களும் இணைந்து உதவியதில் அறுவைச் சிகிச்சை மூலம் ஆரோக்கியம் பெற்றவன். ஒவ்வொரு வருடமும் தனக்கு மீள்வாழ்வு தந்தவர்களை (பண உதவி செய்தவர்களை) நன்றியுடன் தவறாது கடித மூலமும், தொலைபேசி மூலமும் அழைத்து அளவளாவி நன்றி பகிர்ந்து மகிழ்ந்தவன். உதவி வேணுமா?… என்றால் தயங்கி ‘வேண்டாம்’ என்பதே இவன் பதில் இதனை மீறி உதவிகள் செய்த போதெல்லாம் மறு தினமே தொலைபேசியில் அழைத்து என்னை அன்புடன் நலன் விசாரித்து அன்பு பாராட்டியவன். பால்ய நட்புக் காலத்தில் தனது வீட்டிற்கு அழைத்து தேனீர், சாப்பாடு படைத்த அந்த நாட்களும், தனது வீட்டு முற்றத்தில் இருந்த திராட்சைப் பழங்களை ஆய்ந்து எங்களுடன் உண்டு மகிழ்ந்தவன். வேட்டி, சாரம் என்பதை மட்டும் அணியும் பழக்கம் இருந்தாலும் எனது பல்கலைக்கழக அறையிற்கு ‘விசிட்’ அடித்து அளவளாவிச் சென்றவன். கூடவே கிராமத்து இனிய உணவுகளை உடன் எடுத்து வந்து எனக்கு பரிமாறி மகிழ்நதவன். இந்த இழப்பு என்னை சற்றே நிலை குலையத்தான் செய்து விட்டது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது உன்னைத் தேடி என் கால்கள் நிச்சயம் உன் வீடு வரும்… ஆனால் நீ அங்கில்லை என்பதால் என் கணகளில் நீர்த் துளிகளை நான் காணிக்கையாக உனக்கு தருவதை என்னால் தவிர்க்க முடியாது அல்லவா என் நண்பனே. உன் நினைவுகள் என்றும் என்னுடன் பயணித்துக்கொண்டே இருக்கும்.(சிவா ஈஸ்வரமூர்த்தி)

முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம்

முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம். விஷணுபிரியாவும் எதையோ உணர்த்திவிட்டுத்தான் மறைந்துள்ளாரோ? ரஜினி திரணகமவின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகின. விஷ்ணுப்பிரியா சொல்ல வந்தது, இந்த ஜனநாயக அரசின் அங்கங்கள் ஜனநாயக விரோத பாசிச சக்திகளால் ஆட்டுவிக்கப்படுகின்றன. சட்டம் தன் கடமையைச் செய்ய இயலாத நிலை. இந்திய மக்களே, நான் இந்த ஜனநாயக்க் குடியரசின் அடையாளம். எனது நிலையில் நமது சட்டம் சார் அரசு உள்ளது. என்பதை உணர்த்திய செயல். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் தன் தன் கொலையை தானே அறிவித்தார். அவரைக் காக்க வேண்டிய அதிகாரம் விஷ்ணுப்பிரியா. அவரும் தற்கொலை. இரண்டுமே திருச்செங்கோடு. இரண்டிற்குமே காரணம் சட்டம் அல்ல. சட்டத்தின் இயலாமை. இந்தியத் தாலிபான் ஆர்எஸ் எஸ் .நான் சொல்வதைப் புரிந்து கொள்ள மீண்டும் வாசிப்போம் முறிந்த பனை
(Kanniappan Elangovan)

அரசிடமிருந்து பெற்றுக்கொண்ட மொத்த அமைச்சு பதவிகள் இதுவரை ஐந்து!

புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவி, பிரதிக் குழுக்களின் தவிசாளர் பதவி ஆகியவற்றுக்கு மேலாக மாவட்ட அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஜே. ஆர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள் முறைமையை செழுமைப்படுத்தி மீண்டும் அமுலுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கையில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 11 மாவட்ட அமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 08 மாவட்ட அமைச்சர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 03 மாவட்ட அமைச்சர்களும் நியமனம் பெறுகின்றனர்.யாழ். மாவட்ட அமைச்சராக சிவஞானம் சிறிதரன், வன்னி மாவட்ட அமைச்சராக சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராக ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரே பதவி பெற்று உள்ளன. தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டால் மட்டுமே அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வோம் என இவர்கள் தேர்தலுக்கு முன்னர் மங்கம்மா சபதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

(Brin Nath with Karthigesu Nirmalan-Nathan)

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூவருக்கு அமைச்சுப் பதவி!

புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவி, பிரதிக் குழுக்களின் தவிசாளர் பதவி ஆகியவற்றுக்கு மேலாக மாவட்ட அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஜே. ஆர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள் முறைமையை செழுமைப்படுத்தி மீண்டும் அமுலுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கையில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இதன்படி ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 11 மாவட்ட அமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 08 மாவட்ட அமைச்சர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 03 மாவட்ட அமைச்சர்களும் நியமனம் பெறுகின்றனர்.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூவருக்கு அமைச்சுப் பதவி!” தொடர்ந்து வாசிக்க…)

ஏன் இனப்படுகொலை அல்ல?

(Jeyabalan Thambirajah)

எதிரி இராணுவமாகப் பார்க்கப்பட்டு யுத்த முரசு கொட்டி போர் தொடுத்த இலங்கை இராணுவம் எமது மக்களை படுகொலை செய்துள்ளது சித்திரவதை செய்துள்ளது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. உலகம் முழுவதும் எதிரி இராணுவம் இவ்வாறு தான் உள்ளது. ஆனால் யாருக்காக துப்பாக்கி து}க்கினார்களோ அவர்களுக்கு எதிராகவே அந்த துப்பாக்கியைத் திருப்பியது படுமோசமான குற்றம். எதிரியின் குற்றங்களிலும் இது மோசமானது. அதனால் தான் இதனை வன்னிப் படுகொலையை இனப்படுகொலை என என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

(“ஏன் இனப்படுகொலை அல்ல?” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவின் நகல் பிரேரணை- ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியி டப்பட்ட இலங்கை மீதான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக் கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதனை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு சாதகமான பிரேரணையொன்றை நிறைவேற்றவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பநாளில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றும்போது குறிப்பிட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவை அமைப்பது, காணாமல் போனவர்களுக்கான அலு வலகமொன்றை நிறுவுதல், நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான அலுவலகத்தை அமைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

(“அமெரிக்காவின் நகல் பிரேரணை- ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய மீனவர்களின் கோரிக்கை கடற்றொழில் சங்கங்களால் நிராகரிப்பு

இந்திய மீனவர்கள் ரோலர் இயந்திரங்களை பயன்படுத்தி பலவந்தமாக வடக்கு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பது தொடர்பில் இந்தியாவுக்கு சமூகமளிக்குமாறு அந்நாட்டு மீனவர் சங்கம் பிரதிநிதிகள் விடுத்திருந்த கோரிக்கையை வடக்கு கடற்றொழில் சங்கங்கள் நிராகரித்துள்ளன. இந்த கோரிக்கையை நிராகரித்தமைகான காரணம் என்ன என்பது தொடர்பில் வடக்கு கடற்றொழில் சங்கத்தின் ஆலோசகர் விநாயகமூர்த்தி சகாதேவனிடம் கேட்டபோது, மீனவர் விவகாரம் தொடர்பில் இலங்கை பிரதமரும் இந்திய பிரதமரும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினைக்கு சாதாரண மீனவர்கள் பேச்சுநடத்தி தீர்வு காண முடியும் என்று நம்பவில்லை என்பதனால் அந்த அழைப்பை நிராகரித்தோம். இந்திய மீனவ சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள் இந்த கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இரண்டாகப் பிரிகிறது தலிபான் குழு?

ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்கள், இரண்டு பிரிவுகளாகப் பிளவுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதாக, தலிபான் தரப்புகள் தெரிவிக்கின்றன. தலைவர் பதவி தொடர்பாக எழுந்துள்ள கருத்து முரண்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் தலைவராகக் காணப்பட்ட முல்லா ஓமர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவராக முல்லா அக்தர் மொகஹட் மன்சூர் நியமிக்கப்பட்டார். எனினும், அவரது நியமனத்தை ஏற்றுக் கொள்வதற்கு, சில உயர்நிலைத் தலைவர்கள் உட்பட தலிபான்களின் ஒரு பகுதியினர் மறுத்து வருகின்றன. முல்லா ஓமரின் உதவித் தலைவராகக் காணப்பட்ட மன்சூர், முல்லா ஓமரின் மரணத்தை மறைத்து விட்டதாகவும் அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே, அவசர அவசரமாக மன்சூர் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் சில தளபதிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர். ‘நிலைமையைப் புரிந்து கொள்ளவும் புதிய தலைவரை புரிந்துணர்வின் அடிப்படையில் உயர் சபை தெரிவுசெய்வதற்காக பதவி விலகுவதற்கும், மன்சூருக்கு இரண்டு மாதங்கள் வழங்கினோம். ஆனால், அவர் அதைச் செய்ய மறுத்துவிட்டார்” என, மன்சூருக்கு எதிரான தரப்பின் பேச்சாளரான முல்லா அப்துல் மனன் நியாஸி தெரிவித்தார். எனினும், இரு தரப்புக்குமிடையில் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புக் காணப்படுவதை உறுதிப்படுத்த மறுத்த அவர், ஆப்கானிஸ்தான் படையினர் மீது தாங்கள் தனியாகத் தாக்குதல் நடாத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவிடம் பயிற்சி பெற்ற போராளிகள் சிரியாவுக்குள் நுழைவு

சிரியாவில் செயல்படும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவை எதிர்கொள்ள, அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட 75 பேர் கொண்ட சிரியப் போராளிகள் குழு ஒன்று துருக்கியில் இருந்து சிரியாவுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஆதரவுடன் சிரியாவில் செயற்பட்டு வரும் இரண்டு கிளர்ச்சிக் குழுவினருக்கு துணையாக இருக்கும் நோக்கில், அமெரிக்காவால் பயிற்சிய ளிக்கப்பட்ட இந்தப் போராளிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானியா வைத் தளமாக கொண்டு செயற்பட்டு சிரியாவில் இடம்பெறும் மோதலை கண் காணித்து வரும் சிரிய மனித உரிமை கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட சிரியர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் மாத்திரமே தற்போது அங்கு சண்டையில் ஈடுபட்டு வருவதை அண்மை யில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மேலும் ஆயிரக்கணக்கான சிரியர்களுக்கு பயிற்சியளிக்க இருப்பதாக வெளியான தகவல் அண்மையில் ஏளனத்துக்கு உள்ளானது.