காவிகளுக்கு நேருவை கண்டால் அலர்ஜியும் அரிப்பும் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்….

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு ஒருமுறை தமிழக எம்.பிக்களை அழைத்து விருந்தளித்தார். அப்போது நேரு, ‘அடுத்து 100 ஆண்டுகளுக்கு மக்கள் எந்த தலைவரை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருப்பர்.?” என்று கேட்டார். அதற்கு ஒரு எம்.பி, ‘சர்தார் வல்லபாய் பட்டேல்’னு சொன்னார். இன்னொரு எம்.பி ‘மகாத்மா காந்தி’னு சொன்னார். மற்றொரு எம்.பி ‘உங்களை தான் பெருமையாக பேசிக்கொண்டு இருப்பார்கள்’னு சொன்னார். ஆனால், இதையெல்லாம் மறுத்த நேரு, ‘நீங்கள் எல்லாம் அரசியல்வாதிவாதிகள். அதனால் தான் அரசியல் சார்ந்த தலைவர்களை குறிப்பிடுகிறீர்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உங்கள் மாநிலத்தில் உள்ள சமூக சீர்திருத்தவாதி பெரியாரை பற்றி தான் பெருமையாக பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நாடு முன்னேற சமூக ரீதியாக சீர்திருத்தமும் தனி மனித சுய சிந்தனையும் அவசியம். அறியாமை எனும் இருளால் நிரம்பி வழியும் ஒரு நாடு நிச்சயம் முன்னேறாது என உணர்ந்து அதற்காக பாடுபடும் பெரியாரை தான் பெருமையாக பேசிக்கொண்டிருப்பர்’ என்று அவர்களிடம் பிரதமர் நேரு விளக்கினார்.

சோதனைமேல் சோதனை சுரேசுக்கு போதுமடா சாமி !

(மாதவன் சஞ்சயன்)
யானைக்கு குழி பறித்து அதில் தானே வீழ்வது போல் கடந்த தேர்தலில் வீழ்ந்தார் சுரேஸ். கூட்டமைப்பின் வெற்றியை மேலதிக வெற்றியாக்க யாழ் கிறிஸ்த்தவர் ஒருவரும் களம் இறங்கினால் நலம் என எண்ணி மாகாணசபை உறுப்பினர் ஆணல்ட் பெயர் பிரேரிக்கப்பட அவரை ஈ பி ஆர் எல்ல எப் க்கு கொடுத்த 2 ஆசனங்களில் ஒன்றை கொடுத்து உள்வாங்கும்படி சுரேசிடம் கேட்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சுமந்திரன் மெதடிஸ்த கிறிஸ்தவர் என்பதால் ஆணல்டின் விருப்பு வாக்கில் சுமத்திரன் பலன் பெற்று விடுவார் என சுரேஸ் மறுத்துவிட்டார்.

(“சோதனைமேல் சோதனை சுரேசுக்கு போதுமடா சாமி !” தொடர்ந்து வாசிக்க…)

தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்

எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கையில் 2002, 2011 காலப்பகுதிகளில் யுத்தக்குற்றங்களும், மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருப்பதாக கூறி இதற்கு ஒர் சிறப்பு கலப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். போரினால் பாதிப்படைந்து நீதிகோரி நிற்கும் எம்மக்களது ஆதங்கத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உயர்ஸ்தானிகரின் விசாரணை அறிக்கை அமைந்துள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கூடிய விரைவில் எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எமது குடும்பம் நடுத்தெருக்கு வரும் நிலையில்’ JVP தலைவர் விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி

ஜே.வி.பி.யின் தலைவரான ரோஹன விஜேவீரவின் மனைவி மற்றும் பிள்ளைகள் கடற்படை முகாம் ஒன்றிலுள்ள வீட்டில் தங்கியிருந்தனர். வெலிசர கடற்படை முகாமில் இவ்வாறு தங்கியிருந்த விஜேவீரவின் குடும்ப உறுப்பினர்களை அந்த வீட்டைவிட்டு வெளியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக பெரும் சிரமங்களை தாமும் தமது பிள்ளைகள் அறுவரும் எதிர்நோக்கி வருவதாக விஜவீரவின் மனைவி சித்ராங்கனி தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் கடற்படைத் தளபதி கடற்படை முகாமில் அமைந்துள்ள வீடுகளிலிருப்பவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் தமக்கு வெளிநாடு ஒன்றில் தங்குதவற்கு அனுமதியளிக்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என சித்ராங்கனி தெரிவித்துள்ளார்.

தமிழருக்காக கட்சியா…? கட்சிக்காக தமிழரா?

தமிழரைஆதரிப்பதாஅல்லதுகட்சியைஆதரிப்பதாஎன்றகேள்விமீண்டும் கனடியதமிழ் வாக்காளர்கள் முன் வைக்கப்படுகின்றது. நடைபெறவுள்ளகனடாவின் 42ஆவது பொதுத் தேர்தலில் கனடாவின் மூன்றுபிரதானதேசியஅரசியல் கட்சிகளின் சார்பிலும் ஜந்துதமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கனடியபொதுத் தேர்தலில் மூன்றுதேசியகட்சிகளின் சார்பில்தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்குவதும்,அதிகஅளவில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதும் இதுவேமுதல் தடவையாகும். லிபரல் கட்சிசார்பில் சத்தியசங்கரி (கரி)ஆனந்தசங்கரி(ஸ்காபுரோரூச்பார்க்),கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் ரொசான் நல்லரட்ணம்(ஸ்காபுரோதென்மேற்கு),புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ராதிகாசிற்சபைஈசன்(ஸ்காபுரோவடக்கு), செந்திசெல்லையா(மார்க்கம் தோன்கில்) மற்றும் காந்தரட்ணம் மில்ரோய் சாந்தகுமார்(ஸ்காபுரோரூச்பார்க்) ஆகிய ஜவரும் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்களாவார்கள்.

(“தமிழருக்காக கட்சியா…? கட்சிக்காக தமிழரா?” தொடர்ந்து வாசிக்க…)

லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் ஐ வசைபாடும் ஊடகங்கள்

பிரிட்டனில் லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் தெரிவான நாளில் இருந்து, பிரிட்டிஷ் ஊடகங்கள் அவருக்கெதிரான பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. ஜெரேமி கொர்பைன் ஒரு “தீவிர இடதுசாரி” என்பது தான் அந்தப் பிரச்சாரங்களின் சாராம்சம். அதாவது, ஒருவரை இடதுசாரி முத்திரை குத்தி விட்டால் போதும். மக்கள் அவரை தேர்தலில் நிராகரித்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலைமையோ வேறு விதமாக உள்ளது.

(“லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் ஐ வசைபாடும் ஊடகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மனித உரிமை அறிக்கையை ஆராய்கிறது ஶ்ரீ.ல.சு.க

கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஶ்ரீ.ல.சு.கவின் செயலாளரும் கைத்தொழில் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் வாரம் அளவில் இவ்விடயம் தொடர்பிலான அறிக்கையை அக்குழு வெளியிடும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன் போது தெரிவித்தார்.

ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று சொல்வார்கள். ஓர் ஊரில் ஒரேயொரு கீரைக்கடை மட்டுமே இருந்தால் அவரே தனியுரிமை உள்ள வியாபாரியாக இருப்பார். விலையை ஏற்றி விற்றாலும் பழுதடைந்த கீரையையே கொண்டு வந்து தந்தாலும் யாரும் கேட்க முடியாது. ஆனால், அவரது கடைக்கு அருகில் இன்னுமொரு கீரை வியாபாரி கடையைப் போட்டுவிட்டால் நிலைமைகள் மாறிவிடும். போட்டி வியாபாரச் சூழல் என்பதால் குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பதற்கு இருவரும் நான் முந்தி, நீ முந்தியென செயற்படுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நல்லது நடக்கும். ஒலுவில் பிரதேசம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை இரண்டு விடயங்களால் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ர‡ப் அழகுபடுத்தினார். ஒன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றையது, ஒலுவில் துறைமுகம். இவற்றுள் ஒலுவில் துறைமுகம் பல சமூக, புவியியல் எதிர்விளைவுகளை தோற்றுவித்திருக்கின்றது. தலைவர் அஷ்ர‡ப் ஒலுவில் வெளிச்சவீட்டை திறந்து வைத்த போது, உண்மையில் விடயமறியா மக்கள் அதனை துறைமுகம் என்றே பேசிக் கொண்டனர். அதனைப் பார்ப்பதற்கு அயல்; ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் இரவுபகலாக வந்து சென்றது ஞாபகமிருக்கின்றது.

(“ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(“ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வர் விடயம் புகையா ? பனிப்புகாரா ?

(மாதவன் சஞ்சயன்)

வடக்கின் முதல்வர் அடுத்தடுத்து விடும் அறிக்கைகள் சில விடயங்களை கூறாமல் கூறுகிறது. மிகவும் எதிர் பார்க்கையுடன் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சம்மந்தர் தன் ஆளுமை மூலம் கொண்டுவந்த விக்னேஸ்வரன் பதவி ஏற்பின் போதே ஒற்றுமைக்கு சவாலானார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அவரது தொடர் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு வழிவிட்டது. நாளுக்கு நாள் அவர் அன்னியப்பட தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு அரணாக இருந்தவர்களை கூட விலக செய்யும் செயலை அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்தார். தான் சார்ந்த கூட்டமைப்பை அமோக வெற்றி பெற செய்ய வேண்டிய தார்மீக கடமையில் இருந்து அவர் தவறினார். தான் நடுநிலை வகிப்பதாக கூறியது மறைமுகமாக கஜேந்திரகுமாரின் வெற்றியை எதிர்பார்த்தே. கராணம் சுமந்திரன் தோற்க்க வேண்டும் அல்லது வென்றாலும் சும்ந்திரனுக்கு குடைச்சல் கொடுக்க ஒருவர் வேண்டும் என்பதே அவர் விருப்பு.

(“முதல்வர் விடயம் புகையா ? பனிப்புகாரா ?” தொடர்ந்து வாசிக்க…)