லண்டனில் தலைவிரித்தாடிய தமிழ் இளைஞர்களின் வன்முறை

லண்டனில் தலைவிரித்தாடிய தமிழ் இளைஞர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் தனிப்படைப் பிரிவு ஒன்றையும் 24 மணிநேர தொலைபேசிச் சேவை ஒன்றையும் சிறிதுகாலம் ஒழுங்குபடுத்தி இருந்தது. அப்போது ஸ்கொட்லன்ட் யாட்டுக்கு ஆலோசணை வழங்க அவர்கள் உருவாக்கிய குழுவில் நானும் இடம்பெற்று இருந்தேன். அவ்வேளை அவர்கள் லண்டனின் 30 வரையான வன்முறைக்குழுக்களின் இருப்பிடங்களை முற்றுகையிட்டு நூறுபேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நடவடிக்கைகளில் ஒன்றுக்கு நாங்களும் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நடைபெற்ற வன்முறைகளின் தன்மையை ஆராய ஸ்கொட்லன்ட் யாட்டின் இருவர் கொண்ட குழு ரொறன்ரோவுக்கும் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2000 – 2005 காலப்பகுதி லண்டனில் தமிழ் இளைஞர்களின் வன்முறை அதன் உச்சத்தில் இருந்த காலகட்டம். 20 வரையான இளைஞர்கள் இந்த வன்முறை தாக்குதல்களின் போது கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். 600 வரையான தமிழ் இளைஞர்கள் இந்த வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர். ஒப்ரேசன் என்வர் நடவடிக்கையைத் தொடர்ந்து வன்முறைகள் வீழ்ச்சி அடைந்தன. இன்னும் பிரித்தானியச் சிறைகளில் 200 வரையான தமிழ் இளைஞர்கள் வன்முறை தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்று வருகின்றனர்.

(Jeyabalan Thambirajah )

இலங்கையில் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தமிழகத்தில் திருமுருகன் காந்தி யார்?

சுமந்திரன் மீது விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும்.
அவரை விமர்சிக்க வேண்டியவர்கள் வாக்களித்த மக்களும் ஈழ தமிழர்களுமே! புலத்திலும், உள்நாட்டிலும் அரசியல்வாதிகளாலும்
ஊடகங்களினாலும்மோசமான விமர்சனங்களை கடந்து, மக்கள் ஆதரவினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்.
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

(“இலங்கையில் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தமிழகத்தில் திருமுருகன் காந்தி யார்?” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவின் முதலாவது வரைவுக்கு இலங்கை எதிர்ப்பு

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில், ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் எதிர்ப்பை, ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க வெளிப்படுத்தினார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவானது, இலங்கை மீது தவறுகளுக்கான திருத்தங்களை முன்வைப்பதாகவும் முன்னரே ஆரம்பத் தீர்மானமொன்றைக் கொண்ட குணத்தையும் இலங்கை மீது வரையறை விதிப்பதாகவும் காணப்படுவதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நல்லிணக்க, மீளமைப்பு நடவடிக்கைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காததுமாகக் காணப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

(“அமெரிக்காவின் முதலாவது வரைவுக்கு இலங்கை எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மயிலிட்டியில் உண்ணாவிரதம்

இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் தாங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மயிலிட்டி வாழ் மக்கள், இன்று செவ்வாய்க்கிழமை (22) மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தற்போது உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் தமது பகுதி விடுவிக்கப்பட்டு, தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளலாம் எனவும், இடம்பெயர்ந்நது தாங்கள் பல துன்பங்களைச் சந்தித்து வருவதாகவும் அந்த மக்கள் கூறினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் பிரமுகர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் – சரத் பொன்சேகா

நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமது கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட மக்களின் மீது விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்தினர். இந்த தகவல்களை அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று படையினர் விடுத்த வேண்டுகோளின் பின்னர் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். முதல் கட்டமாக 50ஆயிரம் பேர் தப்பிவந்தனர். இதன்பின்னர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே அதிகளவான மக்கள் வெளியேறினர். இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி 150, 000 பேர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.
இதேவேளை மே 14ஆம் திகதியன்று 85ஆயிரம் பேர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறினர் இதனையடுத்து மே 19இல் போர் முடிவுக்கு வந்தது என்றும் பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை நீதிக்கு முரணாக நடந்த மு. கா தலைவர் ஹக்கீம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ள விதம் இயற்கை நீதிக்கு முரணானது என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் எம். பிகள் நியமன விவகாரம் ஏற்கனவே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தேர்தல் கேட்டு தோற்றுப் போன வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் எம். பிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றமையை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிப் பிரமுகர்கள் பலரும் வழக்குத் தாக்கல் செய்து உள்ளனர்.

(“இயற்கை நீதிக்கு முரணாக நடந்த மு. கா தலைவர் ஹக்கீம்!” தொடர்ந்து வாசிக்க…)

சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 25 வது ஆண்டை அந்த ஊர் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நினைவு கூர்ந்தனர்.
சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு. ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றார்கள். 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

துப்பாக்கியால் சுட்டும், கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

(“சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு” தொடர்ந்து வாசிக்க…)

‘சுமந்திரனை கேள்வி கேட்கும் இளைஞனின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியல்’

வி. சபேசன்

‘இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடந்தது’ என்ற கருத்தைத்தான் சுமந்திரன் பல முறை பேசியிருக்கிறார்.
ஆயினும் அவருடைய அரசியல் என்பது மேற்குலகின் சிந்தனையோடு ஒட்டிப் பயணிப்பதாக இருக்கிறது. பேரம் பேசும் வலு அற்ற நிலையில் தமிழர்கள் இருப்பதால், இதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவர் கருதக் கூடும். ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் ‘இலங்கையில் நடந்தது இனப் படுகொலை அல்ல’ என்று கூறி விடுகிறார்.

(“‘சுமந்திரனை கேள்வி கேட்கும் இளைஞனின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியல்’” தொடர்ந்து வாசிக்க…)

என் நண்பனே மீண்டும் எழுந்து வருவாயோ…..?

தங்கம்(ன்) என் பால்ய நண்பன். இன்றுவரை தொடரும் நட்பு. மெலிதாக பேசும் சுபாவம். என் நட்புடன் கூடவே எனது சமூக விடுதலைக் போராட்டத்திலும் என்னோடு பயணித்தவன். நான் புலம் பெயர்ந்து வேறு தேசங்களில் வாழ்ந்த போதும் தொடர்ந்து தேடித் தேடி நட்பை, தோழமையைப் பாராட்டியவன். புலம் பெயர் தேசத்தில் பண்டிகைகளை நான் மறந்திருந்போதும் வாழ்த்துக்கள் கூற என்னை தொடர்ந்து அழைத்த வண்ணம் இருந்தவன். கடைசியாக ஊருக்கு போன போதும் என் கரம் பற்றி ‘…எனக்குத் தெரியும் நீ சாமி கும்பிடுவது இல்லை….’ என்று கூறியபடி…. எனக்காக தன்னுடன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிறிய கோவிலுக்கு அழைத்துச் சென்றவன். பிரசாதத்தை தந்து இதனை ஏற்பாயா என்று அன்புடன் என்னை ஏற்க வைத்தவன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட போது உதவி கேட்டு பதிலுக்கு காணியை தருகின்றேன் என்று கூறியபோது என்னிடம் ஏச்சு வாங்கியவன். பின்பு என்னுடன் இணைந்த அவரின் நண்பர்களும், ஊரவர்களும் இணைந்து உதவியதில் அறுவைச் சிகிச்சை மூலம் ஆரோக்கியம் பெற்றவன். ஒவ்வொரு வருடமும் தனக்கு மீள்வாழ்வு தந்தவர்களை (பண உதவி செய்தவர்களை) நன்றியுடன் தவறாது கடித மூலமும், தொலைபேசி மூலமும் அழைத்து அளவளாவி நன்றி பகிர்ந்து மகிழ்ந்தவன். உதவி வேணுமா?… என்றால் தயங்கி ‘வேண்டாம்’ என்பதே இவன் பதில் இதனை மீறி உதவிகள் செய்த போதெல்லாம் மறு தினமே தொலைபேசியில் அழைத்து என்னை அன்புடன் நலன் விசாரித்து அன்பு பாராட்டியவன். பால்ய நட்புக் காலத்தில் தனது வீட்டிற்கு அழைத்து தேனீர், சாப்பாடு படைத்த அந்த நாட்களும், தனது வீட்டு முற்றத்தில் இருந்த திராட்சைப் பழங்களை ஆய்ந்து எங்களுடன் உண்டு மகிழ்ந்தவன். வேட்டி, சாரம் என்பதை மட்டும் அணியும் பழக்கம் இருந்தாலும் எனது பல்கலைக்கழக அறையிற்கு ‘விசிட்’ அடித்து அளவளாவிச் சென்றவன். கூடவே கிராமத்து இனிய உணவுகளை உடன் எடுத்து வந்து எனக்கு பரிமாறி மகிழ்நதவன். இந்த இழப்பு என்னை சற்றே நிலை குலையத்தான் செய்து விட்டது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது உன்னைத் தேடி என் கால்கள் நிச்சயம் உன் வீடு வரும்… ஆனால் நீ அங்கில்லை என்பதால் என் கணகளில் நீர்த் துளிகளை நான் காணிக்கையாக உனக்கு தருவதை என்னால் தவிர்க்க முடியாது அல்லவா என் நண்பனே. உன் நினைவுகள் என்றும் என்னுடன் பயணித்துக்கொண்டே இருக்கும்.(சிவா ஈஸ்வரமூர்த்தி)

முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம்

முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம். விஷணுபிரியாவும் எதையோ உணர்த்திவிட்டுத்தான் மறைந்துள்ளாரோ? ரஜினி திரணகமவின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகின. விஷ்ணுப்பிரியா சொல்ல வந்தது, இந்த ஜனநாயக அரசின் அங்கங்கள் ஜனநாயக விரோத பாசிச சக்திகளால் ஆட்டுவிக்கப்படுகின்றன. சட்டம் தன் கடமையைச் செய்ய இயலாத நிலை. இந்திய மக்களே, நான் இந்த ஜனநாயக்க் குடியரசின் அடையாளம். எனது நிலையில் நமது சட்டம் சார் அரசு உள்ளது. என்பதை உணர்த்திய செயல். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் தன் தன் கொலையை தானே அறிவித்தார். அவரைக் காக்க வேண்டிய அதிகாரம் விஷ்ணுப்பிரியா. அவரும் தற்கொலை. இரண்டுமே திருச்செங்கோடு. இரண்டிற்குமே காரணம் சட்டம் அல்ல. சட்டத்தின் இயலாமை. இந்தியத் தாலிபான் ஆர்எஸ் எஸ் .நான் சொல்வதைப் புரிந்து கொள்ள மீண்டும் வாசிப்போம் முறிந்த பனை
(Kanniappan Elangovan)