எமது குடும்பம் நடுத்தெருக்கு வரும் நிலையில்’ JVP தலைவர் விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி

ஜே.வி.பி.யின் தலைவரான ரோஹன விஜேவீரவின் மனைவி மற்றும் பிள்ளைகள் கடற்படை முகாம் ஒன்றிலுள்ள வீட்டில் தங்கியிருந்தனர். வெலிசர கடற்படை முகாமில் இவ்வாறு தங்கியிருந்த விஜேவீரவின் குடும்ப உறுப்பினர்களை அந்த வீட்டைவிட்டு வெளியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக பெரும் சிரமங்களை தாமும் தமது பிள்ளைகள் அறுவரும் எதிர்நோக்கி வருவதாக விஜவீரவின் மனைவி சித்ராங்கனி தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் கடற்படைத் தளபதி கடற்படை முகாமில் அமைந்துள்ள வீடுகளிலிருப்பவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் தமக்கு வெளிநாடு ஒன்றில் தங்குதவற்கு அனுமதியளிக்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என சித்ராங்கனி தெரிவித்துள்ளார்.

தமிழருக்காக கட்சியா…? கட்சிக்காக தமிழரா?

தமிழரைஆதரிப்பதாஅல்லதுகட்சியைஆதரிப்பதாஎன்றகேள்விமீண்டும் கனடியதமிழ் வாக்காளர்கள் முன் வைக்கப்படுகின்றது. நடைபெறவுள்ளகனடாவின் 42ஆவது பொதுத் தேர்தலில் கனடாவின் மூன்றுபிரதானதேசியஅரசியல் கட்சிகளின் சார்பிலும் ஜந்துதமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கனடியபொதுத் தேர்தலில் மூன்றுதேசியகட்சிகளின் சார்பில்தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்குவதும்,அதிகஅளவில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதும் இதுவேமுதல் தடவையாகும். லிபரல் கட்சிசார்பில் சத்தியசங்கரி (கரி)ஆனந்தசங்கரி(ஸ்காபுரோரூச்பார்க்),கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் ரொசான் நல்லரட்ணம்(ஸ்காபுரோதென்மேற்கு),புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ராதிகாசிற்சபைஈசன்(ஸ்காபுரோவடக்கு), செந்திசெல்லையா(மார்க்கம் தோன்கில்) மற்றும் காந்தரட்ணம் மில்ரோய் சாந்தகுமார்(ஸ்காபுரோரூச்பார்க்) ஆகிய ஜவரும் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்களாவார்கள்.

(“தமிழருக்காக கட்சியா…? கட்சிக்காக தமிழரா?” தொடர்ந்து வாசிக்க…)

லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் ஐ வசைபாடும் ஊடகங்கள்

பிரிட்டனில் லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் தெரிவான நாளில் இருந்து, பிரிட்டிஷ் ஊடகங்கள் அவருக்கெதிரான பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. ஜெரேமி கொர்பைன் ஒரு “தீவிர இடதுசாரி” என்பது தான் அந்தப் பிரச்சாரங்களின் சாராம்சம். அதாவது, ஒருவரை இடதுசாரி முத்திரை குத்தி விட்டால் போதும். மக்கள் அவரை தேர்தலில் நிராகரித்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலைமையோ வேறு விதமாக உள்ளது.

(“லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் ஐ வசைபாடும் ஊடகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மனித உரிமை அறிக்கையை ஆராய்கிறது ஶ்ரீ.ல.சு.க

கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஶ்ரீ.ல.சு.கவின் செயலாளரும் கைத்தொழில் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் வாரம் அளவில் இவ்விடயம் தொடர்பிலான அறிக்கையை அக்குழு வெளியிடும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன் போது தெரிவித்தார்.

ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று சொல்வார்கள். ஓர் ஊரில் ஒரேயொரு கீரைக்கடை மட்டுமே இருந்தால் அவரே தனியுரிமை உள்ள வியாபாரியாக இருப்பார். விலையை ஏற்றி விற்றாலும் பழுதடைந்த கீரையையே கொண்டு வந்து தந்தாலும் யாரும் கேட்க முடியாது. ஆனால், அவரது கடைக்கு அருகில் இன்னுமொரு கீரை வியாபாரி கடையைப் போட்டுவிட்டால் நிலைமைகள் மாறிவிடும். போட்டி வியாபாரச் சூழல் என்பதால் குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பதற்கு இருவரும் நான் முந்தி, நீ முந்தியென செயற்படுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நல்லது நடக்கும். ஒலுவில் பிரதேசம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை இரண்டு விடயங்களால் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ர‡ப் அழகுபடுத்தினார். ஒன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றையது, ஒலுவில் துறைமுகம். இவற்றுள் ஒலுவில் துறைமுகம் பல சமூக, புவியியல் எதிர்விளைவுகளை தோற்றுவித்திருக்கின்றது. தலைவர் அஷ்ர‡ப் ஒலுவில் வெளிச்சவீட்டை திறந்து வைத்த போது, உண்மையில் விடயமறியா மக்கள் அதனை துறைமுகம் என்றே பேசிக் கொண்டனர். அதனைப் பார்ப்பதற்கு அயல்; ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் இரவுபகலாக வந்து சென்றது ஞாபகமிருக்கின்றது.

(“ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(“ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வர் விடயம் புகையா ? பனிப்புகாரா ?

(மாதவன் சஞ்சயன்)

வடக்கின் முதல்வர் அடுத்தடுத்து விடும் அறிக்கைகள் சில விடயங்களை கூறாமல் கூறுகிறது. மிகவும் எதிர் பார்க்கையுடன் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சம்மந்தர் தன் ஆளுமை மூலம் கொண்டுவந்த விக்னேஸ்வரன் பதவி ஏற்பின் போதே ஒற்றுமைக்கு சவாலானார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அவரது தொடர் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு வழிவிட்டது. நாளுக்கு நாள் அவர் அன்னியப்பட தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு அரணாக இருந்தவர்களை கூட விலக செய்யும் செயலை அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்தார். தான் சார்ந்த கூட்டமைப்பை அமோக வெற்றி பெற செய்ய வேண்டிய தார்மீக கடமையில் இருந்து அவர் தவறினார். தான் நடுநிலை வகிப்பதாக கூறியது மறைமுகமாக கஜேந்திரகுமாரின் வெற்றியை எதிர்பார்த்தே. கராணம் சுமந்திரன் தோற்க்க வேண்டும் அல்லது வென்றாலும் சும்ந்திரனுக்கு குடைச்சல் கொடுக்க ஒருவர் வேண்டும் என்பதே அவர் விருப்பு.

(“முதல்வர் விடயம் புகையா ? பனிப்புகாரா ?” தொடர்ந்து வாசிக்க…)

முகப்பு புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்…… அனந்தியே ஒரு போர் குற்றவாளி….

நல்லாட்சித் தத்துவம் எனக் கூறிக்கொண்டு சமாதானப் புறாவாக வலம்வருகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போர்க் குற்றவாளி தான் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அனந்தியே ஒரு போர் குற்றவாளி…. – Ratnasingham Annesley
புலிகளுக்கும் ஏனைய விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே உள்ள பாரிய வேறுபாடு புலிகள் பொது மக்களையும் மாற்றுக் கருத்தாளர்கள் மாற்று விடுதலை விடுதலை அமைப்பினரை தமது இயக்கத்தின் கொள்கையாக பிரகடனப்படுத்தி செயற்படுத்தினர். ஸ்தாபன மயப்படுத்தியே செய்தனர். மற்றைய இயக்கத்தினர் இவற்றை தமது நடைமுறைத்தவறுகளுடூ செய்திருக்கின்றனர்.

(“முகப்பு புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்…… அனந்தியே ஒரு போர் குற்றவாளி….” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்

உள்ளக விசாரணைகள் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் விசாரணைகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்ஸுக்கு எதிரான அமெரிக்காவின் நான்கைந்து கிளர்ச்சியாளர்களே மிச்சம்

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக போராட அமெரிக்கா பயி ற்சி அளித்த கிளர்ச்சியாளர்களில் நான்கு அல்லது ஐந்து பேரே களத்தில் போராடி வருவதாகவும் அந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்றும் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. ஐ.எஸ்ஸுக்கு எதிராக அமெரிக்காவின் யுத்த மூலோபாயத்தின் கீழ் சுமார் 5,000 கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் மற் றும் பயிற்சி வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களை வழங்க கொங்கிரஸ் அவையில் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இந்த திட்டதின் கீழ் பயிற்சிபெற்ற 54 பேர் கொண்ட குழுவின் பெரு ம்பாலான கிளர்ச்சியாளர்கள் அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா குழுவி டம் சிக்கி இருப்பதாக அமெரிக்க இராணுவ ஜெனரல் லொயிட் ஒஸ்டின் அமெ ரிக்க செனட் அவையில் விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா பயிற்சியளித்த வீரர்களில் எஞ்சியிருக்கும் எண் ணிக்கை நகைச்சுவையானது என்று குடியரசு கட்சி செனட் உறுப்பினர் கெல்லி அயோட்டே குறிப்பிட்டுள்ளார். “இந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்து விட்டதை நாம் கண்டறிந்திருக்கிறோம். அது அப்படி இருக்கக் கூடாது என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் அதுதான் உண்மை” என்று மற்றொரு குடி யரசு கட்சி செனட்டர் ஜெப் செசன் குறிப்பிட்டார்.