ஈழ நிசான் அறக்கட்டளையால் 725 மாணவர்களுக்கு உதவி

ஈழ நிசான் அறக்கடையால் 725 மாணவர்களுக்கு, 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் வைத்து இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வாகனங்கள் மீதான வரி 600% வரை அதிகரிக்கும் சாத்தியம்

தற்போது 300% ஆக உள்ள வாகனங்கள் மீதான இறக்குமதி வரி, மேலும் அதிகரிக்கும் எனவும் சில சொகுசு வாகனங்கள் மீதான வரி 600% வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சுங்க அதிகாரிகள் ஏழு நாளும் வேலை

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் சுங்கத்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது

தோழர் அன்ரனி ஜீவா

(என். சரவணன்)

அந்தனி ஜீவா அவர்கள் காலமாகிவிட்ட செய்தி கவலையளிக்கிறது. கடந்த சில வருடங்களாக அவர் உடல்நிலை குன்றி இருந்தார்.மலையக இலக்கியத்தின் அடையாளங்களில் ஒருவராக பலரால் அறியப்பட்டவர்.

சைக்கிளில் சென்றவருக்கு 25,000 ரூபாய் தண்டப்பணம்

யாழ்ப்பாணத்தில் மது போதையில் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.  அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற போது அச்சுவேலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீதிமன்று அந்நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பி அனுப்பப்படும் ரோஹிங்யா அகதி மக்கள்

பர்மா என்ற பண்டைய பெயரையுடைய மியன்மாரில் நடைபெற்று வரும் கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தலால், தங்களது வாழ்விடங்களை இழந்து, உயிரை மாத்திரமேனும் காத்துக்கொள்ளும் வகையில் ஆபத்தான கடல் மார்க்கப் பயணத்தின் மூலம் இலங்கை வரும் ரோஹிங்ய மக்கள் தொடர்ச்சியாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

3 போலி உரிமதாரர்கள் சிக்கினர்

போலியான ஆவணங்களை தயாரித்து போலியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை தயாரித்த வெரஹெர பிரதேசத்தில் பாடசாலை ஒன்றை நடத்தும் நபர் உட்பட மூவரை பொலன்னறுவை பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியும் முடிவுறாத் துயரமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

புத்தாண்டு பிறந்தாலும், அதனை சராசரி இலங்கையர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சி, ஏமாற்றம், புதிய ஜனாதிபதி, அதீத பெரும்பான்மையுடனான பாராளுமன்றம் என மூன்று ஆண்டுகளில் ஏராளமானவற்றை இலங்கையர்கள் பார்த்து விட்டார்கள். இன்னமும் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை. போகிறபோக்கில் இப்போது அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லத் தோன்றுகிறது.

திருப்பி அனுப்பப்படும் ரோஹிங்யா அகதி மக்கள்

பர்மா என்ற பண்டைய பெயரையுடைய மியன்மாரில் நடைபெற்று வரும் கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தலால், தங்களது வாழ்விடங்களை இழந்து, உயிரை மாத்திரமேனும் காத்துக்கொள்ளும் வகையில் ஆபத்தான கடல் மார்க்கப் பயணத்தின் மூலம் இலங்கை வரும் ரோஹிங்ய மக்கள் தொடர்ச்சியாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மதுபானங்கள் மீதான வரி அதிகரிப்பு

அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை 6 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நேற்று (10) நள்ளிரவு முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.