2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி (சிடிஎஸ்) ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று வலியுறுத்தினார்.
“மக்களின் வினைத்திறனான பங்களிப்புடன் வெற்றியடைய முடியும்”
பொது மக்களின் வினைத்திறனான பங்களிப்புடன் மாத்திரமே தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் வெற்றியடைய முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் 2025 ஜனவரி 1ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிபிட்டார்.

எரிபொருட்களின் விலையில் மாற்றம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு;அதிகளவான வெளியேற்றம் பதிவு
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கெடுபிடி அதிகரிப்பு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், 100ஆவது வயதில், ஞாயிற்றுக்கிழமை (29) காலமானார். அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர், 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயற்பட்டார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர், ஞாயிற்றுக்கிழமை (29) காலமானார்.
ஓய்வு பெறுகிறார் ஜெனரல் சவேந்திர சில்வா
இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் 8ஆவது பிரதானியான (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். ஜூன் 1, 2022 அன்று CDS ஆக நியமிக்கப்பட்ட ஜெனரல் சில்வா, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்திற்கு சேவையாற்றியுள்ளார். CDS இன் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அவர் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும், இலங்கை இராணுவத்தின் 23 வது தளபதியாகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
8000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 8068 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் விசாரணைகள் நிறைவு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து அடுத்த அமர்வில் முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.