காசாவை அமெரிக்கா தன்வசப்படுத்தி, எடுத்து கொண்டால் அதன்பின்னர் எப்படி இருக்கும் என்பது பற்றிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வீடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்பு கடுமையான வார்த்தை மோதல்களில் முடிந்து உள்ளது.
சஞ்சீவ படுகொலை: இதுவரை 12 பேர் கைது
திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொலையைத் திட்டமிட சிம் கார்டுகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக இவ்விருவருடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
’வாபஸ் பெறாவிட்டால் சிக்கல்’
வார்த்தைப் போரில் அமெரிக்க ஜனாதிபதி ட்றம் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி
(தோழர் ஜேம்ஸ்)
ரஷ்யா, உக்ரேன் யுத்தம் ஆரம்பித்த நாட்களின் தொடராக அந்த யுத்த்தின் பின்புலம் பற்றி விரிவாக எழுதி இருந்தேன்.
தற்போது ட்றம் ஆட்சியிற்கு வந்த பின்பு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ‘வியாபாரத்தில்’ அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த வளங்களும் ஒரு காலத்து சோவியத் குடியரசின்(USSR) வளங்கள்தான் என்பதையும் இங்கு கவனத்தில் எடுக்கவும்.
யுத்தம் அற்ற வியாபாரத்தை அவர் சில இடங்களில் செயற்படுத்த விரும்புவார். அதில் அதிக வருவாய் வரும் என்பதாக.
அதில் ஒன்றுதான் அவரது முன்னைய ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் விலக்கி தலிபான்களிடம் ஆட்சியை கைவிட்டு வந்தது
இதற்கு முன்பு இருந்த ஜோ பைடன் அமெரிக்க நிர்வாகம் யுத்தத்தை தொடரும் ஆயுத விற்பனை என்ற வியாபாரத்தை நடாத்தி வந்தது
போர் நிறுத்தம்….
ஏலவே அமெரிக்கா யுத்தத்திற்கான வழங்கிய பணத்தை உக்ரேன் மீள் அளிக்க வேண்டும்.
அல்லது
உக்ரேனின் வளங்களில் சிலவற்றை 500 மில்லியன் அளவிற்கு எழுதித் தரவேண்டும் என்றான முன் மொழிவை ட்றம் நிர்வாகம் முன்வைத்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை கைசாத்திட வெள்ளை மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார் ஜெலன்ஸ்கி
இதன் உச்சமாக இன்று அமெரிக்காவின் ஓவல் கட்டடத்தில் ட்றம், ஜெலன்ஸ்கி இடையிலான வார்த்தைப் போர் ஏனைய நிர்வாகிகள், பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த வார்த்தைப் போர் உச்சத்தை அடைந்துள்ளது.
பொதுவாக இம்மாதிரியான சந்திப்புகளின் பின்பு நடைபெறும் கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு உணவருந்தல் என்பன இடை நிறுத்தப்பட்டு ஜெலன்ஸ்கி வெளியேறுவிட்டார்.
உலகம் முழுவதும் ஊடகங்களில் இது சார்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொணடிருக்கையில்
Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. இக் கட்டுரையை இங்கு இணைக்கின்றேன் இது பல உண்மைகளை தெளிவுபடுத்தும் என்பதற்காக…..
“எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது”
என்ற தலைப்பில் 27.9.2018 Yale (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை.
பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர்.
ரஷ்யா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.
1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன.
கோர்பச்சேவ் (1985-1991) அதை சாதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் மூன்று குடியரசுத் தலைவர்களும் Belavezha என்ற இடத்தில் ஒன்றுகூடி சோவியத் இனை இல்லாமலாக்க கூட்டணி அமைத்துக் கொண்டார்கள் என்ற தகவலும் வெளிவந்தது.
சோவியத் இன்மையின் பின், அந்த கட்டமைப்பின் மையமாக செயற்பட்ட ரஷ்யக் குடியரசு பலம்பொருந்திய நாடாக உருவாகியது.
பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்து அமெரிக்காவுடனான அதன் உறவை பேண விரும்பியது.
1992 இல் ஜெல்சின்(அப்போதைய ரஷ்யா அதிபர்) அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார்.
“நாம் இருவரும் கைகுலுக்கிக் கொள்வோம்” என காங்கிரசில் உரையாற்றினார்.
ஆனால் அமெரிக்கா ரஷ்யாவை தனது எதிரி நிலையிலிருந்து மாற்றிக்கொள்ளவில்லை.
கம்யூனிச கட்சிகள் ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியிலும் பிரான்சிலும் பலம்பொருந்தியதாக இருந்தன அன்று.
கம்யூனிச அச்சம்; அமெரிக்காவுக்கு நீங்கியபாடில்லை.
ரஷ்யாவிலும்கூட அது மீண்டும் எழலாம் என்ற அச்சமும் இருந்தது.
இந் நிலையில் 1992 இல் அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கையின் பொறுப்பாளர் Paul Wolfowitz இன் இரகசிய அறிக்கை கசிந்து நியூயோர்க் ரைம்ஸ் இல் வெளியாகி பரபரப்பாகியது.
அது….
- அமெரிக்கா தனது மேலாதிக்க நிலையில் ஒரேயொரு நாடாக இருப்பதற்கு சவாலாக எந்த ஒரு நாட்டையும் அனுமதிக்கக்கூடாது.
- தமது நட்பு நாடுகள் ஆயுத உருவாக்கம் அல்லது உற்பத்தி குறித்து கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் உங்களுக்காக செய்வோம்.
- ரஷ்யாவை கண்காணிக்க வேண்டும். அந்த கரடி மீண்டும் தனது பின்காலை ஊன்றி எழுந்து நிற்கலாம்.
இது பின்னர் பாதுகாப்பு அமைச்சர் Powel, Cheney இருவராலும் மாற்றி எழுதப்பட்டது.
ரஷ்யாவும், அமெரிக்காவும் Super Power ஆக தொடர்ந்து இருக்க வேண்டும் என மாற்றம் பெற்றது.
ஆனால் அது காகிதத்தோடு போனது. விரைவிலேயே ரஷ்யா இரண்டாவது நிலை நாடாகவே கணிக்கப்பட்டது.
அமெரிக்க வெளிநாட்டமைச்சரான ஜேம்ஸ் பேக்கருக்கு வாக்குறுதி அளித்தபடி பேர்லின் சுவரை கொர்பச்சேவ் வீழ்த்தினார்.
“இனி நேற்றோ(NATO) ஒரு அங்கலம்கூட கிழக்குநோக்கி நகராது” என்பதே அந்த வாக்குறுதி.
அந்த வாக்குறுதியும் காகிதத்தோடு போனது.
90 களின் நடுப் பகுதியில் நேற்றோவை கிழக்கு நோக்கி விரிவுபடுத்தும் முடிவு எடுக்கப்பட்டு முதற்கட்டமாக போலந்து, செக் குடியரசு, கங்கேரி நாடுகள் நேற்றோவில் இணைக்கப்பட்டன.
அமெரிக்க வரலாற்றாய்வாளரும் இராசதந்திரியுமான ஜோர்ஜ் கென்னன் இந்த முடிவை எச்சரித்தார்.
மே1998 இல், “இது ஒரு புதிய பனிப்போரின் ஆரம்பம் என நினைக்கிறேன்” என்றதோடு, “ரஷ்யா இதற்கேற்ப படிப்படியாக தனது நிலையை மாற்றிக்கொள்ள நேரிடும். அது அவர்களின் தற்போதைய கொள்கையை மாற்றியமைக்கும்” என்றார்.
“இந்த நேற்றோ விரிவாக்க முடிவு ஒரு கவலைதரும் தவறு எனவும் அதை எந்த காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது” என்றார்.
நேற்றோவின் விரிவாக்கத்தால் ரஷ்யா ஏமாற்றமடைந்தது.
அதன் விரக்தியை ஈடுசெய்ய அமெரிக்காவோ மேற்குலகோ எதையுமே செய்யவில்லை.
மாறாக யூகோஸ்லாவியா மீதான யுத்தத்தை ஆரம்பித்தது. சேர்பியாவில் நிலப்பரப்புள் இருந்த கொசோவோவை தனிநாடாக பிரித்தது.
ஜெல்சின்(ரஷ்யா அதிபர்) கோபமடைந்தார்.
“நாங்கள் கெயிற்றி நாடு அல்ல. எங்களை நீங்கள் அப்படி கையாள முடியாது. நாங்கள் பெருமிதமான நாடு.
எங்களுக்கு அத்தகைய கடந்த கால வரலாறு இருக்கிறது. ரசியா மீண்டும் எழும்” என தனது கோபத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தினார்.
2000 இல் புட்டின் செய்த முதல் முயற்சி ரஷ்யாவை நேற்றோவில் அங்கம் வகிக்க கோரிக்கை விட்டதுதான்.
ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நேற்றோ உண்மையில் சோவியத் இன் கம்யூனிசத்துக்கு எதிராகவும் அது மேற்கொள்ளக்கூடிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் செயற்படும் நோக்கம் கொண்டதாகவே இருந்தது.
இதன் மாற்றுக் கூட்டணியாக இருந்த Warsaw கூட்டணி சோவியத் உடைவோடு இல்லாமல் போனபோது நேற்றோவுக்கான தேவையும் இல்லாமல் போயிருக்க வேண்டும்.
மாறாக அது பலம்பொருந்தியதாக மாறிக்கொண்டிருந்தது.
ஐரோப்பாவின் பாதுகாப்பு என்ற லேபலில் இயங்கியது NATO அமைப்பு.
இதே தர்க்கத்தை வைத்து புட்டின் “அப்படியானால் ஐரோப்பாவில் உள்ளடங்கும் ரஷ்யா ஏன் இதில் அங்கம் வகிக்கக்கூடாது அல்லது எம்மையும் உள்ளடக்கிய புதிய அமைப்பு ஒன்றை ஏன் உருவாக்கக் கூடாது” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவருக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைத்த பதில் Go for walk என்ற நையாண்டியாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக அல்லது இணைப்பு நாடாக ரஷ்யா இருப்பதற்கான கோரிக்கையை புட்டின் முன்வைத்தபோதும், அதை நிராகரித்தமைக்கு அரசியலடிப்படையிலான காரணம் முன்வைக்கப்படவில்லை.”இல்லை ரஷ்யா மிகப் பெரிய நாடு” என்ற பதிலே கிடைத்தது. - நேற்றோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் உண்மையில் 1994 காலப்பகுதியில் பில் கிளிங்ரனின் அமெரிக்க ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்று வரை எந்த மாற்றமும் இன்றி தொடர்கின்றது.
இதற்குள் இருக்கும் நீண்ட காலமாக செயற்பாட்டில் இருக்கும் தற்போதைய இஸ்ரேல் பிரதம மந்திரியி நெத்தனயாகோவின் நீண்ட கால செயற்பாடுகளும் அடங்கும். அது முன்னால் சோவியத் நட்பு நாடுகளை துவசம் செய்வது என்பதாகவும் அதன் உடன் கூடி ஏனைய சோவியத் ஆதரவு திவுpரவாத அமைப்புகளை இல்லாது செய்தலும் அடங்கும்.
இந்த புறக்கணிப்பு எல்லாம் ரஷ்ய மக்களுக்கு கோர்பச்சேவ் மற்றம் ஜெல்சின் மீதான கோபத்தை விளைவித்தது.
“நீங்கள் இருவரும் எமது நாட்டை விற்றுவிட்டீர்கள்” என அவர்கள் கடுமையாக சாடினார்கள்.
இன்று இந்த இருவருக்குமான செல்வாக்கு ரசியாவில் 5 வீதத்துக்கும் குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.(இந்த இருவரும் தற்போது மரணமடைந்தும் விட்டனர்)
இந்த கோப உணர்ச்சி ரஷ்ய மக்களை அமெரிக்க எதிர்ப்பு மனநிலைக்கு மேலும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
ஆனாலும் நியுயோர்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தபோது தொலைபேசியில் புட்டின், அமெரிக்க அதிபர் புஷ் உடன் தொடர்புகொண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்பட தனது உதவியை நல்குவதாக தெரிவித்தார்.
அதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு மத்திய ஆசியப் பகுதியை உபயோகிக்க வசதிசெய்து தருவதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராக சேர்ந்து செயற்படுவோம் எனவும் சொன்னார்.
ஆனால் புஷ் அதை புறந்தள்ளினார்.
இவ்வாறாக ரஷ்யா தனது தரப்பில் எடுத்த இராசதந்திர முயற்சிகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டன.
2007 இல் G20 மாநாட்டில் புட்டின் உரையாற்றியபோது, நேற்றோவின் விரிவாக்கம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார்.
“நேற்றோ ஐரோப்பிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது என்பதால் இதை கேட்கும் உரிமை எங்களுக்கும் உள்ளது. எங்களுக்கு எதிராக ஏன் இந்த விரிவாக்கம்?” என நேரடியாகவே கேட்டார்.
“1990 மே17 அன்று புரூசலில் என்ன சொல்லப்பட்டது. நேற்றோ இராணுவத்தை ஜேர்மனிக்கு வெளியில் தரித்துவைக்க மாட்டோம். சோவியத் யூனியனுக்கு ஒரு ஸ்திரமான பாதுகாப்பு உறுதிப்பாட்டை நாம் வழங்குவோம் என்றீர்கள். எங்கே அந்த உறுதிப்பாடு?” என்று கேட்டார் புட்டின்.
அதற்கான பதில் இவ்வாறாக இருந்தது. “ஆம் கொடுத்தோம்தான். அது சோவியத்துக்குத்தான், ரஷ்யாவுக்கு அல்ல. நீங்கள் ரஷ்யர்கள்”. என பதில் கிடைத்தது.
ரஷ்யாவை அவமானப்படுத்துகிற இன்னொரு நையாண்டிப் பதிலாக இது இருந்தது.
2017 இல் புட்டின் அமெரிக்காவையும் மேற்குலகையும் பார்த்து இவ்வாறு கூறினார். “எங்களுடைய தவறு உங்களை நம்பியது. உங்களது தவறு அதை உங்களுக்கு சாதகமாக எடுத்தது” என்றார்.
மேற்குலகினதும் அமெரிக்காவினதும் இந்த அரசியல் சித்துவிளையாட்டு புட்டினின் அணுகுமுறைகளை மாற்றியமைத்தது.
அதாவது புட்டின் இன்று இவர்களை எந்தவிதத்திலும் நம்பவில்லை.
இன்னும் எதிர்நிலையில் நிறுத்திவிட்டிருக்கிறது.
இராஜதந்திர முயற்சிகளை இல்லாமலாக்கியிருக்கிறது.
தெலங்கானாவில் தெலுங்கு கட்டாயம்
கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஜெலன்ஸ்கி சம்மதம்
வெளிநாட்டுப் பயண செலவினங்களை வெளியிட்டார் பிரதமர்
தாவ முயன்றார் ஜயவீர: தடுத்தார் பிரதமர்
சர்வஜன பழைய கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சபைக்கு நடுவாக ஆளும் கட்சி பக்கம் செல்ல தயாரான சம்பவம் வியாழக்கிழமை (27) இடம்பெற்றது. அதை அவதானித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய தவறியேனும் எமது பக்கம் வந்துவிட வேண்டாம் என்று கூறி அவரை தடுத்து நிறுத்தினார்.
யாழில் ஆரம்பமாகிய மீனவர்களது போராட்டம்
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை(27) அன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.