வட இலங்கை வளம்

(Sivakumar Subramaniam)

வட இலங்கை, குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள், பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட மாகாணமாக அறியப்படுகிறது.

“குற்றவாளிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க தீர்மானம்”

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

’’ஜனாதிபதி ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும்’’

நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் நியமனம்

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக மூத்த ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மூத்த ஊடகவியலாளரான அனுருத்த லொக்குஹபுஆராச்சி, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கீழ் சர்வதேச ஊடகங்கள் மற்றும் மூலோபாய தொடர்புகளுக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரெய்ல் முறையில் பிரேரணையை முன்வைத்து வரலாற்று சாதனை

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி. பெரேரா இன்று முதல் முறையாக பிரெய்ல் முறையில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பாராளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்து வரலாறு படைத்தார்.

மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  இந்த 6 மாதங்களில் 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த வறட்சி அதிகரித்தால் அது மேலும் அதிகரிக்கும் என்றார்.

ஜனாதிபதி அனுர இன் பாதுகாப்பு

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அது ஆட்சி மாற்றமாக ஆரம்பித்து அரசியல் மாற்றமாக உருவெடுத்து வருவதாக உணரப்படுகின்றது
இந்த அரசியல் மாற்றம் உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் விரும்பப் படாத நிலமைகளையும் சிலர் மத்தியில் ஏற்படுத்தியும் இருக்கின்றது.

புதிய மோட்டார் சைக்கிள் ரூ.10 இலட்சம்

வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு பெறப்படும் முதல் தொகுதி வாகனங்களில், புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூ. 1 மில்லியன் (10 இலட்சம் ரூபாய்) ஆகும்.

ஆரையம்பதியில் ஆவாகுழு பாணியில் வாள்வெட்டு

மட்டக்களப்பு – ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வியாழக்கிழமை (20) மாலை 6 மணியளவில்  5 பேர் கொண்ட குழு   வாள்களுடன்  நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி கருத்து

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.