பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 19)

பற்குணம் அவர்கள் பயிற்சிகாலத்தில் வாழைச்சேனையில் பணியாற்றினார்.ஒரு இளைஞர் ஒருவர் அதுவும் தமிழர் புதிதாக நிர்வாக சேவையில் சேர்ந்து தன் தொகுதியில் பணியாற்றுவதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரை பற்குணத்தை தானாகவே நேரில் வந்து சந்தித்து வாழ்த்தினார்.இது பற்குணத்துக்கு அதிரச்சியாகவும் கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.ஏனெனில் அவர் ஒரு மக்கள் பிரதிநிதி.அவர் போய் சந்திக்க வேண்டிய ஒருவர் தன்னை வந்து பார்த்து வாழ்த்தி வரவேற்றது கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.இதை அவரிடமே நேரில் சொன்னார்.இனிமேல் தேவை எனில் அழையுங்கள் நானே வருவேன் என்றார்.ஆனாலும் மீண்டும் சில தடவை அழைக்காமலே இராசதுரை வந்து பார்த்தார்.கொள்கை முரண்பாடு இருந்தபோதும் இராசதுரையின் இந்த பண்பு பற்குணத்துக்கு பிடித்திருந்தது .இராஜன் செல்வநாயகம் கவனிக்கவே இல்லை.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 19)” தொடர்ந்து வாசிக்க…)

சிவகரன் கைதானமைக்கு த.தே.கூ கண்டனம்

மன்னார் மாவட்டத்திலிருந்து, வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சி சேர்ந்த சுப்பிரமணியம் சிவகரனின் கைது உட்பட, இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, மன்னார் மாவட்டத்திலிருந்து, வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சி சேர்ந்த சுப்பிரமணியம் சிவகரன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இன்று மதியம் கைதுசெய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பதை அறிந்து, நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.

இந்தக் கைது மாத்திரமல்லாமல், கடந்த சில நாட்களில் பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பல உத்தியோகபூர்வமான கைதுகளாக இல்லாமல், கடத்தப்பட்டுப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றமையானது, மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகக் காணப்படுகிறது.

இன்றைய கைது உட்பட இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்குக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புலிகளின் முக்கியஸ்தர் ராம் இன் கைதும் அவர்வழங்கிவரும் வாக்கு மூலமும் தற்போது நடைபெற்றுவரும் கைத்துகளின் பின்னணியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உழைக்கும் மக்களினதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களினதும் உரிமைகளை வலியுறுத்தி காவத்தையில் கூட்டு மே தினம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000/= அதிகரிக்க கோரியும் ஆசிரிய உதவியாளர்களை நிரந்தரமாக்க கோரியும் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க கோரியும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தியும் பல அமைப்புகளினது கூட்டு மே தினக் கூட்டம் காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் எதிர்வரும் மே 01ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையா, மக்கள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அழைப்பாளர் டபிள்யூ. சோமரட்ன, மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் பா. மகேந்திரன், சமூக சீராக்கல் இயக்கத்தின் அழைப்பாளர் எம். கமலதாசன் ஆகியோரின் உட்பட பலர் உரையாற்றவுள்ளனர். இக் கூட்டத்தில் உழைக்கும் மக்களின் தலைமையிலான சேசலிச சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சமூக மாற்றத்தை வேண்டிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

வெல்லப்போகும் பணநாயகம்

(அ. ராமசாமி)

ஜனநாயகத்தை உருவாக்கும் தேர்தலில் வாக்களிக்கும் அனுபவத்தைவிடக் கூடுதலான அனுபவத்தை எனக்கு உணர்த்திய தேர்தல் 2006 சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலில் நண்பர் ரவிக்குமார் வேட்பாளராகக் களத்தில் இறங்கினார். அவரது தேர்தல் பிரசாரத்தின்போது அவர் போட்டியிட்ட தொகுதியில் குறுக்கும்நெடுக்குமாகப் பயணம் செய்தேன். அந்தப் பயணங்களின்போது நான் பெற்ற அனுபவங்களை அப்போதே காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறேன். அப்போது தொடங்கிய பணநாயகம் இப்போது பன்மடங்காகவும் பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது.

(“வெல்லப்போகும் பணநாயகம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 18 )

பற்குணம் நிர்வாக சேவைப் பயிற்சிக்காக மட்டக்களப்புக்கு போனார்.அங்கே இவரது பாடசாலைக் கால நண்பர் கதிர்காமநாதன் கிளாக் ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார்.இவர் உயர்சாதி எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்.படிக்கும் காலத்தில் சாதிபாகுபாடுகளை வெறுத்தவர்.எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோவார்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 18 )” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக சட்டமன்றத் தேர்தல்: வெளிச்சத்துக்கு வராத வியூகங்கள்

தமிழகத்தின், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், ஏப்ரல் 22ஆம் திகதி தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், இந்தத் திகதியிலிருந்து தொடங்கிவிட வேண்டும். அதுதான் கடந்த காலத் தேர்தல் களத்தின் சிறப்பம்சம். அரசியல் கட்சிகள், பெரும்பாலும் ‘தனிப்பட்ட தாக்குதலை’ தவிர்த்தே வருகின்றன. குறிப்பாக, தே.மு.தி.க-மக்கள்நலக்கூட்டணித் தலைவர்களாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, அனைவருமே ‘தனிப்பட்ட தாக்குதலை’த் தொடுக்கவில்லை.

(“தமிழக சட்டமன்றத் தேர்தல்: வெளிச்சத்துக்கு வராத வியூகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

600 பொலிஸாரின் கொலையுடன் தொடர்புபட்டவர் ராம்

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி, சமூகமயப்படுத்தப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் என்பவர், பயங்கரவாத விசாரணைப்பிரிவின் (ரி.ஐ.டீ) காவலில் உள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

(“600 பொலிஸாரின் கொலையுடன் தொடர்புபட்டவர் ராம்” தொடர்ந்து வாசிக்க…)

சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்..!!

மே 1 தொழிலாளர் தினம் – 2016
சூரிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம்,
01.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு…

தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! கழகத் தோழர்களே! தோழமைக் கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2016 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்து கொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பைச் செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக!

(“சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்..!!” தொடர்ந்து வாசிக்க…)

எம்மவரின் விசுவாசம்

இன்று யாழ்ப்பாணம் கச்சேரி கேட்போர் கூடத்தில் போலீஸ் பொதுமக்கள் சந்திப்பு நடந்தது……அதின் போது கூட்டமைப்பின் மாகாணசபை அங்கத்தவர ஒருவர் கூறினாராம்…..புலிகளின் காலத்தில் குற்றங்கள் மிகவும் குறைவாக நடந்தது என்று மறைமுகமாக….அதற்கு ஒரு ASP பதிலளிக்கையில் …பயங்கரவாதிகள் போன்று விரும்பிய எல்லோரையும் கொலைசெய்தும்,,,,வழக்கு கணக்கு இல்லாமல் தண்டனை கொடுத்தும்….அதை விட யுத்த காலங்களில் நடந்தது போன்று விசாரணை இல்லாத விடயங்களை செய்ய முடியுமானால்???? 2 மணி நேரத்தில் இவைகளை அடக்க தம்மால் முடியும்…..ஆனால் ஒரு அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைய அப்படி தாங்கள் செய்ய முடியாது என்று….. அதை புரிந்துகொண்ட புலிகேசி திரும்ப கேள்வியே கேட்கவில்லையாம்….

பற்குணம் (பதிவு 17 )

பற்குணத்தோடு அவரது நெருங்கிய நண்பர்களான டிவகலாலாவும் நிர்வாகசேவைக்கு தெரிவானார் .இன்னொரு நண்பரான ரீ.ஈ. ஆனந்தராசா பொலிஸ் நிர்வாகசேவைக்கு தெரிவானார்.பற்குணம் நிர்வாக சேவைக்கு தெரிவானதில் அவருடைய பல்கலைக்கழக ஆசிரியர்களும் நண்பர்களும் வரவேற்றனர். பற்குணம் படிக்கும் காலத்திலும் பின் விரிவுரையாளரான பின்னும் பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார்.இதில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் இடதுசாரிக்கோட்பாடுகளை ஏற்காதவர்.ஆனால் மிக நல்ல மனிதர்.இவருக்கு இறுதி வருடங்களில் யாராவது ஒரு மாணவன் பரீட்சையில் சித்திபெற தவறினால் மிகவும் கவலைப்படுவாராம்.ஆனால் ஒரு சில பேராசிரியர்கள் இதைப் பற்றிக் கவலைகொள்வது இல்லை.

(“பற்குணம் (பதிவு 17 )” தொடர்ந்து வாசிக்க…)