யாழ். இளைஞர்கள் கைது

இரவு வேளையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யுhழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளையில் நடமாடியதுடன், மது போதையில் தகராற்றிலும் ஈடுபட்டுள்ளனர். குற்றச் செயல்களை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரப்பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 8 பேரையும், மதுபோதையில் நின்ற 6 பேரையும், அடிபட்ட 1 நபரையும், மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் உட்பட 16 பேரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 16 பேரும் யாழ். பொலிஸ் நிpலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வட மாகாணசபையை கலைத்து கையிலெடுக்கவும்: கம்மன்பில

வட மாகாணசபையைக் கலைத்துவிட்டு, அதன் நிர்வாகத்தை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான உதய கம்மன்பில, கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, வட மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துரைத்தார்.

(“வட மாகாணசபையை கலைத்து கையிலெடுக்கவும்: கம்மன்பில” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா மீண்டும் முதல்வராவாரா? அல்லது மாற்றம் வருமா?

தமிழ்நாட்டிற்கான தேர்தல் மே16 நடைபெற்று முடிவுகள் மே19 வெளிவரவுள்ளது. இம் முறை யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என எந்தவித எதிர்வும் கூறமுடியாமல் இருக்கிறது தமிழக கள நிலவரங்களை பார்க்கும் போது. யாருக்கும் அறுதிப்பெருபான்மை கிடைத்துவிடும் எனபதும் சந்தேகமே தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர். தேர்தல் கூட்டணிகள் கட்சித்தாவல்கள் கூட்டணி சேர்கைகைள், பிரிப்புகள். கழட்டிவிடபட்ட நிலைமைகள் என ஓரே அல்லோலகல்லோலப் பட்டவண்ணம் இருக்கிறது தமிழககட்சிகள்.

(“ஜெயலலிதா மீண்டும் முதல்வராவாரா? அல்லது மாற்றம் வருமா?” தொடர்ந்து வாசிக்க…)

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்ன இருக்கிறது கல்வி முறை..?

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

��பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பாடசாலைக்கு செல்லத் தொடங்குகிறது…

��ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை…

��கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை…

(“உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்ன இருக்கிறது கல்வி முறை..?” தொடர்ந்து வாசிக்க…)

காவத்தையில் கூட்டு மே தினம்

தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000/= ஆக உயர்த்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரித்துடன் வீட்டை வழங்கு, அனைவருக்கும் சமமான கல்வியும் இலவசக் கல்வியையும் உறுதி செய், கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து, ஆசிரிய உதவியாளர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கு, வாழ்கை செவை குறை, தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கு என்ற கோரிக்கைகளை முன்னிருத்தி மக்கள் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் பண்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடாத்தும் கூட்டு மே தினக் கூட்டம் 01.05.2016 அன்று மு.ப. 10 மணிக்கு காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தமது உறுப்பினர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏனைய உழைக்கும் மக்களுக்கும் அவ் அமைப்புகள் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு

ஐரோப்பா, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து, ஒரே பொருளாதார வலயத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தப் புதிய பொருளாதார வலயம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது.

(“புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ( பதிவு 16)

பற்குணத்துக்கும் நடராசா குடும்பத்துக்கும் கடித மூலமான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.நடராசாவின் தம்பி தங்கராசா,இராசதுரை ஆகியோரும் பண்பற்ற முறையில் கடிதங்களை எழுத பற்குணம் தன் கௌரவம் கருதி பதிலளிப்பதை நிறுத்திவிட்டார்.இதில் இராசதுரை நாகரீகமற்ற வார்த்தைகளைப் பாவித்தார்.இதன் காரணமாக இந்தக் குடும்பத்துடனான தொடர்புகள் விடுபட்டன. பற்குணம் விரிவுரையாளர்.

(“பற்குணம் ( பதிவு 16)” தொடர்ந்து வாசிக்க…)

பசுமை நிறைந்த சம்பூர் மண் சுடுகாடாக மாறப் போகிறதா?

திருகோணமலை சம்பூரில் 500 மெகாவாட்ஸ் அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தினை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதன் மூலம் இராஜதந்திர உறவுகளுக்கும் சுற்றாடல் பாதுகாப்புக்கும் இடையே நாடு ஊசலாட்டம் கண்டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பு மீது அதீத அக்கறை கொண்டுள்ள இந்த அரசாங்கம், சம்பூர் அனல் மின் நிலையம் விடயத்தில் நுனிப்புல் மேய்வது போல் சுற்றாடல் தாக்கம் பற்றிய மதிப்பீட்டு அறிக்கை தயாரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(“பசுமை நிறைந்த சம்பூர் மண் சுடுகாடாக மாறப் போகிறதா?” தொடர்ந்து வாசிக்க…)

புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம், அரசியல் அரங்கில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உருக்கினால் தயாரிக்கப்பட்ட இந்த வீடுகள், வடக்கிலுள்ள காலநிலைக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்றதல்ல என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபையின் வாதமாக இருக்கிறது.

(“புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

கைக்குண்டுடன் அரசியல்வாதியின் தேசிய அடையாள அட்டை

வவுனியா குட் ஷெட் பகுதியிலிருந்து, கைக்குண்டொன்றும் அதன் அருகிலேயே பிரபல தமிழ் அரசியல்வாதியொருவரின் தேசிய அடையாள அட்டையொன்றும் மீட்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையத்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் கைக்குண்டு தணிக்கைச் செய்யும் விசேட அதிரடிப்படையினர் மூலம் குண்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.