பற்குணம் ( பதிவு 3)

அண்ணன் பற்குணம் நாங்கள் அறிந்தவரையில் மிகவும் துணிச்சலான மனிதர்.ஆனால் அவர் சிறு பராயம் அப்படி அல்ல.குழந்தையில் இளம் பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு தப்பியவர்.15 வயது வரையில் மிகவும் பயந்த ஒருவராகவே வாழ்ந்தவர். அம்மா காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருந்த காலத்தில் இவர் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் பெரிய அண்ணனைத் தொடர்ந்து படிக்க சேர்ந்தார்.இவர் சேர்ந்த காலத்தில் நடராசாவும் மற்றும் இருவரும் படிப்பை முடித்துவிட்டனர்.எனவே பெரிய அண்ணன் துணையோடு பள்ளிக்குப் போய் வந்தார்.இவர் சேர்ந்த பின் ஒரு உண்மை அய்யாவுக்கு தெரியவந்தது.பெரிய அண்ணன் பாடசாலைக்கு ஒழுங்காக போவதில்லை .கண்டித்துப் பார்த்தார்.அப்பவும் ஏமாற்றமே.எனவே அவரை வரணி மகாவித்தியாலயத்துக்கு மாற்றிவிட்டார்.

(“பற்குணம் ( பதிவு 3)” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் கந்தையா வேலுப்பிள்ளை மறைந்தார்..

நம்மில் பலரும் அவரை இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களான தர்மகுலசிங்கம், புவிராஜசிங்கம், ராஜகுலசிங்கம் (பாபு கேட்டரிங் உரிமையாளர்), விஜயகுலசிங்கம், டொக்டர் பஞ்சகுலசிங்கம் ஆகியோரினதும், மற்றும் இந்திராணி ( கல்யாணி ), செல்வஜோதி, புஷ்பஜோதி , பிரோமஜோதி ஆகியோரின் தந்தையாராகத்தான் அறிவோம். கந்தையா அவர்கள் ஒரு பெரும் சமூக சேவகர் என்பதும், சமூக மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர் என்பதையும், முன்னாளில் நல்லதொரு கம்யூனிஸ்ட் ஆக செயல்பட்டார் என்பதையும் நம்மில் பலரும் மறந்துவிடக் கூடாது. இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசு மாஸ்டரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தவர் தோழர் கந்தையா. தோழர் கந்தையாவின் சொந்த வாழ்க்கையே புரட்சிகரமானது. ‘வலது கை கொடுப்பது இடது கை அறியாது’ என்பதுபோல் அவர் செய்த சமூக உதவிகளையும், பல்வேறு சேவைகளையும் அறிந்தால் பிரமிப்படைந்துவிடுவோம். ‘நீ சமூகத்தை மாற்றுவது என்பது உன்னில் இருந்துதான் ஆரம்பிக்கிறது’ என்பதை நம்பியவர் அவர். ஒரு குழந்தையுடன் விதவையாக இருந்த கனகம்மாவை மறுமணம் புரிந்த புரட்சிவாதி. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தில் இத்தகைய விவாகம் மாபெரும் சமூகப்பிரமிப்பாக இருந்தது. நல்லதொரு கணவனாக, மொத்தம் ஒன்பது குழந்தைகளுக்கு அப்பாவாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் தோழர் கந்தையா. அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அவரது பிரிவால் துயருறும் அவர்தம் பிள்ளைகளுடன் நாமும் துயரத்தில் பங்கு கொள்கிறோம்.

(Narayana Moorthy)

தமிழ்ச்செல்வனை காட்டிக் கொடுத்த நடேசன்

தமிழ்ச்செல்வன் கொலையில் வெளியாகும் ‘CIA’ இரகசியம்..! பின்னணியில் அமெரிக்கா..?

விடுதலைப் புலிகளின் அழிவில் தமிழ் இனப்படுகொலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வகித்த பாத்திரம் பற்றி ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. அது குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளியான போதிலும் வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளான அமெரிக்க அடிவருடிக் கும்பல் அவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது. உலகில் பல கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை தீர்த்துக் கட்டியது போன்று புலிகளின் தலைவர்களையும் அழிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. அதனை இரகசிய CIA ஆவணம் வெளிப்படுத்தி உள்ளது.

(“தமிழ்ச்செல்வனை காட்டிக் கொடுத்த நடேசன்” தொடர்ந்து வாசிக்க…)

புறப்படும் புதுப் புரளிகள்: ‘பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்’

இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்து விட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும், கரும்புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதியுமான பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், மறைந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

(“புறப்படும் புதுப் புரளிகள்: ‘பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்’” தொடர்ந்து வாசிக்க…)

சங்கரின் கொலைக்கு யார் காரணம்….?

பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் “நீங்க எந்த ஆளுங்க…?” என்று கேட்டுவிடுவதுதான் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம். தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடும் வழக்கம் தமிழ்நாட்டில் தற்போது குறைந்துவிட்டதால் இப்படி சாதியை நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளும் தவறான பழக்கம் நம் மக்களிடையே தோன்றியிருக்கலாம். இதோ இப்போது சங்கர் என்ற தலித் இளைஞரை சாதிக்கு பலி கொடுத்துவிட்டது தமிழ்நாடு. அண்மைக்காலங்களில் தமிழகத்தை உலுக்கிய “தலித் இளைஞர்களின்” கொலைகளில் இது மூன்றாவது கொலை.

(“சங்கரின் கொலைக்கு யார் காரணம்….?” தொடர்ந்து வாசிக்க…)

துறைமுக நகர் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி

கொழும்பு துறைமுக நகர்வேலைத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் அளித்திருப்பதை சீன தொடர்பாடல் கட்டுமான துணை நிறுவனம் நேற்று உறுதி செய்தது. இதேவேளை பரஸ்பர நன்மையளிக்க கூடிய தீர்வை நோக்கியதான இலங்கை அரசாங்கத்தின் நேர்மறைவான ஒருபடி முன்னோக்கிய கடப்பாடுகளையும் மேற்படி நிறுவனம் பாராட்டியுள்ளது.

(“துறைமுக நகர் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி” தொடர்ந்து வாசிக்க…)

187 கிலோ மன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு

மன்னார் -சிலாபத்துறை, முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுக் காலை(16) இடம்பெற்றது. மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மாவட்ட மதுவரி திணைக்கள பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் சிலாபத்துறை கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடத்தியுள்ளனர்.

(“187 கிலோ மன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் -(பதிவு-2)

எங்கள் அம்மாவின் பெயர் வள்ளிப்பிள்ளை.மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் பிள்ளை.சிறுவயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் அண்ணன்கள் அரவணைப்பில் வாழ்ந்தவர்.அய்யாவும் அம்மாவும் காதல் திருமணம்தான்.அம்மா மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். யாழ் குடாநாட்டின் பெரும் வயல்நிலப்பரப்பான தனங்கிளப்பு வயல்களில் அம்மாவின் காலடிகள் பதித்தவர்.எனது கிராமத்தில் இருந்து கேரதீவுப் -சங்குப்பிட்டி பால எல்லைவரை சென்று கூலிவேலை செய்து உழைத்தவர்.

(“பற்குணம் -(பதிவு-2)” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் மகிந்த

எனது அரசாங்கத்தின் வெளிப்படுத்தப்படாத கடன்களும் கடன் பொறுப்புகளும் இப்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை அறிக்கையொன்றை ராஜபக்ஷ விடுத்திருக்கிறார். அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
வங்கிகளுடன் அவை நடவடிக்கைகளில் தாமாகவே செயற்படுகின்றன. அரச நிறுவனங்களினால் கடன் பெற்றுக் கொள்ளப்படுகின்றமை பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட சட்டங்களின் மூலமே நிருவகிக்கப்படுகிறது.

(“பிரதமரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் மகிந்த” தொடர்ந்து வாசிக்க…)

சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறும்

சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகளை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். சிரிய முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான ஐ.நா சபையினால் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த திங்கட்கிழமையன்று, இரவு நேரத்திலேயே இந்த அறிவிப்பு விடுவிக்கப்பட்டது.

(“சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறும்” தொடர்ந்து வாசிக்க…)