உயிருடனோ இறந்தோ அசாட் வெளியேற வேண்டும்

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமாயின், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், உயிருடனோ அல்லது இறந்தோ, பதவியை விட்டு வெளியேற வேண்டுமென, சிரிய எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன. சிரியப் பேச்சுவார்த்தைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், அங்கு வைத்து, இடைக்கால அரசாங்கம் அல்லது நிர்வாகப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை முயன்று வருகின்றது.

(“உயிருடனோ இறந்தோ அசாட் வெளியேற வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

சுந்தர் எனும் தோழனாய்

ஒரு வருசம் கடந்து போனது உன் நினைவில்.எப்படி இன்னும் நம்ப மறுக்கிறது மனம் ,கடந்து செல்லும் நினைவுகள் ,காலம் எனும் கடலில் நாம் கரைந்து போகும் என்பார்கள்.எல்லாம் நிஜமாய் எப்போதும் நம்முள். 1974 முதல் சந்திப்பு தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து ”ஈழ விடுதலை இயக்கம் ” (தமிழீழ விடுதலை இயக்கமல்ல) மகிழ்த்த நேரம்,சேனையூர் மகாவித்தியாலய ஆசிரியர் விடுதியில் ஆசிரியர் புலோலியூர் .தா.ஜெயவீரசிங்கம் அவர்களோடு அன்னலிங்க அய்யா,தங்க மகேந்திரன் அத்தோடு சுந்தரும்.ஈழவிடுதலை இயக்க பரப்புரைக்கு புறப்படுகிறோம் .சம்பூரில் தோடம் பழம்,கிளிவெட்டியில் தவகுமார்,கங்கு வேலியில் கிருபா,பட்டித்திடலில் கவிஞர் ,வீரப்பா,மல்லிகைத்தீவில் சுரேஸ்,பள்ளிகுடியிருப்பு,பச்சநூல் ,கூனித்தீவு ஈச்சலம்பத்தை, என கொட்டியாரத்தின் கிராமங்கள் தோறும் பலநூறு பேரின் அணி சேர்ப்பு.நடந்தே கழிகிறது எங்கள் பயணம் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் எங்களோடு இணைகின்றனர்.

(“சுந்தர் எனும் தோழனாய்” தொடர்ந்து வாசிக்க…)

லீகுவான்யூ “ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்”

லீகுவான்யூ “ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்”. அதனால், அவர் நல்லவர் என்று நாம் போலித் தமிழர் கட்சியினர் சொல்லித் திரிகின்றனர். சொந்த நாட்டு மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சர்வாதிகார ஆட்சி நடத்திய லீகுவான்யூ, தமிழர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் நல்லவராகி விட்டாராம். சிங்கப்பூரில் மலே தேசியவாதிகளையும், சீனக் கம்யூனிஸ்டுகளையும் சிறையில் அடைத்து வருத்திய லீகுவான்யூ, நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராம்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய லீகுவான் யூ, அயலில் இருக்கும் அச்சே மக்களுக்கு ஆதரவாக பேசாத காரணம் என்ன? இந்தோனேசியாவின் அச்சே மாநிலம், சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கிறது. மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்ட அச்சே மக்கள், நீண்ட காலமாக தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அச்சே மாநிலத்தில், இந்தோனேசிய படையினர் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து, லீகுவான்யூ ஒரு வார்த்தை பேசி இருப்பாரா?

(“லீகுவான்யூ “ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்”” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். உயர் பாதுகாப்பு வலயத்தில் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

 

வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து 700 ஏக்கர் காணி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களுக்கு மீள கையளிக்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் மேற்படி 700 ஏக்கர் காணிகளை மக்களுக்குக் கையளிப்பதுடன் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65,000 வீடுகளுக்கான காணிகளையும் பார்வையிடவுள்ளார். 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்படவுள்ளது.

(“யாழ். உயர் பாதுகாப்பு வலயத்தில் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்!

“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்” என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது. பாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ‘தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்’ என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது.

(“விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு டிவி நிகழ்ச்சி… ஒரே இரவில் ‘ஜோக்கர்’ ஆன ‘டொனால்ட் ட்ரம்ப்’!

அரசியல் – உலகின் பழமையான தொழில்; ஆனால் அதன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல. பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் உலகெங்கிலும் வேறுபட்டுத் தெரிந்தாலும், மனிதனின் அடைப்படை மனோபாவம் மாறுவதில்லை. வெகுஜனங்களைப் பொறுத்த வரையில் அது இரண்டு பிரிவுகளின் கீழ் வகுக்கப்படுகிறது. அவை முறையே, நாம் ஆளப்படவேண்டியவர்கள் என்பதும், நாம் ஆள வேண்டியவர்கள் என்பதுதான்.

(“ஒரு டிவி நிகழ்ச்சி… ஒரே இரவில் ‘ஜோக்கர்’ ஆன ‘டொனால்ட் ட்ரம்ப்’!” தொடர்ந்து வாசிக்க…)

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை உள்ளூராட்சி தேர்தலை உறுதி செய்ய முடியாது

எல்லை நிர்ணயம் குறித்த மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கும்வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான இயலுமை இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான வட்டாரங்கள் அமைக்கப்படாத நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நல்லாட்சி அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணைக்கு விரோதமானது என்றும் கூறினார்.

(“எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை உள்ளூராட்சி தேர்தலை உறுதி செய்ய முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

மியன்மார் ஜனாதிபதியாவதற்கு சூகிக்கு தடை

மியன்­மாரின் ஜனாதிபதியாவதற்கு ஆங் சான் சூகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனா­தி­பதி பெயர் பட்­டி­யலில் சூகியின் முன்னாள் சாரதி ஹ்தின் க்யாவ் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­கான போட்­டியில் இதுவரை இருவரின் பெயர்கள் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நாடா­ளு­மன்றம் இந்த வாரம் தெரிவு செய்யும். இரா­ணுவத்தின் அரசியமைப்புச் சட்­டத்­தின்­படி, உயர்­ அ­ர­சியல் பொறுப்பு வகிக்க, தேசிய ஜன­நா­யக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்குத் தடை­ விதிக்­கப்­பட்­டுள்­ளது.

(“மியன்மார் ஜனாதிபதியாவதற்கு சூகிக்கு தடை” தொடர்ந்து வாசிக்க…)

சாதிவெறியும் புலிகளும்

இந்திய இராணுவ யுத்தம் முடிந்த பின் சில வசதி அற்ற ஏழைகள் இந்திய இராணுவம் ,இந்திய செஞ்சிலுவைச் சங்கம் வழங்கும் உணவுப்பொருட்களை வாங்கி வாழ்வைக் கழித்தனர்.இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை புலிகள் உணவு வாங்கி உண்ட ஒரே காரணத்துக்காக சுட்டுக் கொன்றனர். அளவெட்டியில் வடக்குப்பகுதி இந்திய உணவு வாங்கி உண்ண அனுமதிக்கப்பட்டனர்.தெற்குப் பகுதியில் அனுமதிக்கவில்லை .காரணம் சாதி ஒன்றே.
தெல்லிப்பழை மதி, நெல்லியடி சுக்லா இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை காரணமின்றி அடித்தனர்.பின்னாளில் இளம்பருதியும் சேர்ந்து கொண்டார்.

(“சாதிவெறியும் புலிகளும்” தொடர்ந்து வாசிக்க…)

எமது கிராம போராட்டத்தின் பின்

போராட்டத்தில், பலியான இரத்தினம் அவர்களுக்கு குழந்தை இல்லை.அவர் மனைவி இளம் வயதில் விதவையானார்.மீண்டும் மணம் முடிக்காமல் வெள்ளைப் புடவையுடன் விதவையாகவே வாழ்ந்தார்.அவரனது அண்ணனும் தங்கையுமே பக்க பலமாக இருந்தார்கள்.திடீரென விரக்தியுற்ற அவர் 1996 இல் தற்கொலை செய்துகொண்டார் .

(“எமது கிராம போராட்டத்தின் பின்” தொடர்ந்து வாசிக்க…)