ஸ்ரீலங்காவிற்கு இந்திய நிதி உதவி?!

இந்தியாவின் எக்ஸிம் வங்கியின் நிதியுதவியுடன் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளவுள்ள மூன்று பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த ஒப்பந்தத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்ஸார், இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி தலைவர் யதுவேந்திரா மதூர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

(“ஸ்ரீலங்காவிற்கு இந்திய நிதி உதவி?!” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்?!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள், நால்வரையும் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா உத்தரவிட்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தன் [பிள்ளையான்], எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா [பிரதீப் மாஸ்டர்], கனகநாயகம் [கஜன் மாமா] ராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

(“பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்?!” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளிடம் ராணுவம் கைப்பற்றிய தங்கத்தை தேடும் ரணில்?!

போரின் முடிவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி இன்னமும் சிறிலங்கா இராணுவத்திடம் இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இதுதொடர்பான தகவல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். ”போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினரால் 150 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. அதில் 131 மில்லியன் ரூபா பெறுமதியான 30 கிலோ (31,150.34 கிராம்) தங்கம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது. 2010 செப்ரெம்பருக்கும், 2012 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், 28 சந்தர்ப்பங்களில் இவை ஒப்படைக்கப்பட்டன.

(“புலிகளிடம் ராணுவம் கைப்பற்றிய தங்கத்தை தேடும் ரணில்?!” தொடர்ந்து வாசிக்க…)

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததாஸி தேரோ, கண்டி வைத்தியசாலையில் சற்று முன்னர் காலமானார். விஹாரையிலுள்ள குளியலறையில் விழுந்த தேரர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என் மனவலையிலிருந்து……

சர்வதேசப் பெண்கள் தினம்.

(சாகரன்)

இன்று சர்வதேசப் பெண்கள் தினம். வருடத்தின் ஒவ்வொரு நாட்களையும் ஒரு தினமாக பிரகடனப்படுத்தி அன்றுடன் அதற்கு முற்றுப் புள்ளி வைத்து மீண்டும் அடுத்த ஆண்டு நினைவு கூரும் செயற்பாட்டின் வடிவங்கள் தற்போது எல்லாம் முன்னிலை பெற்று வருகின்றன. இதில் அன்னையர் தினம், தந்தையர் தினம், பெண்கள் தினம், தொழிலாளர் தினம் என்பன அன்றுடன் இத் தினங்களுடன் சம்மந்தப்பட் விடயங்கள் ‘கொண்டாடப்பட்டு ஏனைய தினங்களில் இவற்றின் தாற்பரியங்களை மறக்கும் வடிவங்களை முன்னிறுத்தும் உலகின் புதிய ஒழுங்கிற்குள் நாம் வீழ்ந்து வருகின்றோம் என்பதை சற்ற ஆழமாகப் பார்த்தால் புரியும்.

(“என் மனவலையிலிருந்து……” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 21)

பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேச போராட்டத்தில் எமது ஊரவர்கள் கலந்துகொள்ள முடியாமல் போனது கவலைக்குரிய விசயம்.மட்டுவில் இளைஞர்களும், மந்துவில் இளைஞர்களும் மிக நெருங்கிய நட்பில் இருந்தும் திட்டமிட்ட சதியால் கலந்து கொள்ளமுடியவில்லை. எமது ஊருக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்து அவ்வப்போது கரைப்பார்கள்.இக் காலத்தில் நடராசா குடும்பம் கல்வயலுக்கு இடம் பெயர்ந்துவிட்டது.அவரின் தாய்,மற்றும் சகோதர்ர்கள் வந்து போவார்கள்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 21)” தொடர்ந்து வாசிக்க…)

உறவுப் பாலம்

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

‘சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு வடக்கு பிரதேசத்தில் ஊழியர்களைப் பெற்றுக்கொண்ட போது பலர் அதனை எதிர்த்தனர். இராணுவத்துக்கு ஆள் சேர்க்கவும் தேர்தலை முன்னிட்டும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை எனப் பலரும் வதந்திகளைப் பரப்பினர். எனினும், நாம் இந்தப் பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்து விடவில்லை. இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நாம் மேற்கொண்ட முயற்சி, இன்று நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

(“உறவுப் பாலம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்

 

மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான். முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு ஒரு உறுதியான நாள், நேரம் கிடையாது.

(“தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்” தொடர்ந்து வாசிக்க…)

புனர்வாழ்வு ஒன்றுதான் வழியென்றால்?

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 12 வது நாளாக தொடர்கின்றது. இன்று வரை, அவர்களின் உடலநிலை மோசமாக பாதிக்கப்படவில்லை என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை வைத்தியசாலை மருத்துவர்கள் கைதிகளின் உடல் நிலையை அடிக்கடி அவதானித்து வருகின்றனர். உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் எவரும் உயிரிழக்க நேரிட்டால் அரசாங்கத்திற்கு அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

(“புனர்வாழ்வு ஒன்றுதான் வழியென்றால்?” தொடர்ந்து வாசிக்க…)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 158 தமிழர்களே சிறையில் உள்ளனர்!

இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பான விவாதமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனடிப்படையில், 103 கைதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன என அவர் தெரிவித்தார்.

(“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 158 தமிழர்களே சிறையில் உள்ளனர்!” தொடர்ந்து வாசிக்க…)