வடக்கு முதல்வரின் கிழக்கு விஜயம்?

வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவருமான நீதியரசர் சீ.வி. விக்கினேஸ்வரன் எதிர்வரும் வாரத்தில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சீ.வி. விக்கினேஸ்வரன் மட்டக்களப்புப்பு வருகை தரவுள்ளார். கடந்த மாதத்தில் தமிழ் மக்கள் பேரவையின் புதிய அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கலந்துரையாடலுக்கு விக்னேஸ்வரன் வருகை தருவார் என்ற எதிர்பார்ப்பு அன்றைய தினம் மக்களுக்கு நிறைவேறாது போனது அந்த வகையில் எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வடமாகாகண முதலமைச்சர் வருகை தருவார் என்று தெரிகிறது.

‘சைலன்ட் கில்லருக்கு’ தடை

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகக் கருத்தரங்கொன்றின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இலங்கையில் காணப்படும் எந்தவொரு கடையிலும், இந்த சுவையூட்டியைக் கொள்வனவு செய்ய முடியும். இது, மொனோ சோடியம் க்ளூடோமேட் (எம்.எஸ்.ஜீ) என்ற விஞ்ஞானப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. உணவுகளைச் சுவையூட்டுவதற்காக உலக நாடுகள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் இந்த சுவையூட்டியானது, அமைதிக் கொலையாளியாக தொழிற்பட்டு வருகின்றது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்’ என்றார்.

(“‘சைலன்ட் கில்லருக்கு’ தடை” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உண்டு!

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்றும் பொறுப்பு தமக்கு இருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக வட மாகாண மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் இன்று மாலை மகஸின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(“அரசியல் கைதிகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உண்டு!” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த தகாத வார்த்தைகளால் திட்டினார்!?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை 19 நிமிடங்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மகளிர்தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் “நான் பதவி விலகியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த சமயம் அவரது 60 ஆவது பிறந்த தினமும் வந்ததால் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டேன். சுமார் 19 நிமிடங்கள் மஹிந்த என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

(“மஹிந்த தகாத வார்த்தைகளால் திட்டினார்!?” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்! செங்கையாழியான்!

எழுத்தாணி தனித்தேதான் ஏங்கிற்றம்மா
ஏற்றமுறு செங்கையாழியனின் கையில்
பழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து
பயன் செய்த காலம்தான் போச்சே என்று
விழுத்தாது ஈழத்து நவீனம்தன்னை
வீறுடனே எழச்செய்த மன்னன் போக
சலித்தேதான் மற்றவர் கை ஏகேனென்று
சட்டென்று அதுவும் கண்மூடிற்றம்மா !

(“ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்! செங்கையாழியான்!” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ஒரு கல்லறையின் அருகில்…

சென்னை சாந்தோமில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறை அது. உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் ஒரு உன்னத ஆத்மாவின் நினைவு நாள் இன்று(08/03/2016) என்றும் நீங்காத ராகங்களை மனதினுள் இசைத்துக்கொண்டு இருக்கும் அவரது கல்லறையில் முன் கலங்கிய கண்களுடன் நிற்கிறேன்அவரது கல்லறை பறவைகளின் எச்சங்கள் பட்டும், நுாலாம்படை சூழ்ந்தும், துாசு படிந்தும் மாசு நிறைந்தும் காணப்பட்டது

(“இன்று ஒரு கல்லறையின் அருகில்…” தொடர்ந்து வாசிக்க…)

எஸ்தர் அக்கா

எஸ்தர் அக்கா அலங்கரிக்கப்பட்டிருந்தாள். முகத்தின் சுருக்கங்கள் அறியாதபடிக்கு ஏதோ களிம்பைப் பூசியிருந்தார்கள். பட்டுப்புடவை ஒன்றை அவள் மேனியின் மேல் சுற்றி வைத்திருந்தனர். தலையை அழகான வெள்ளை நிற ரீத் அலங்கரித்தது. முன்பென்றால் இத்தனை அலங்காரத்திற்கும் கழுத்தெல்லாம் நகையாக போட்டு நிறைத்திருப்பாள்… ஆனால், சவப்பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில் அதை அவளே கூட விரும்பியிருக்க மாட்டாள்.

(“எஸ்தர் அக்கா” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 20)

இப் போராட்ட காலத்தில் நமது ஊரைக் கேவலப்படுத்தும் விதமாக எங்கோ நடந்த கொலைச் சம்பவங்கள் எல்லாம் மந்துவிலில் கொலை, மந்துவிலில் பயங்கரம் என செய்திகள் போட்டு கேவலப்படுத்தின.இதில் மித்திரன்,வீரகேசரி முன்னணி வகித்தன. எமது ஊரவர்கள் படித்த மட்டுவில் மகாவித்தியாலயம் பல ஊர் மாணவர்களை ஒன்றாக இணைத்தது.நட்பை வளர்த்தது.இதில் கைதடியும் அடங்கும்.1969ம் ஆண்டு கைதடியில் நாடகவிழா நடந்தது. அதற்கு எமது ஊர் மாணவர்களும் போனார்கள்.அந்த நாட்களில் சைக்கிள் பலரிடம் இல்லாத காரணத்தால் பள்ளிக்கூடத்துடன் சம்பந்த மற்ற சைக்கிள் வைத்திருப்பவரகளையும் அழைத்துச் சென்றனர்.இதனால் கொஞ்சம் அதிகமான இளைஞர்கள் நாடகவிழாவுக்குப் போனார்கள்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 20)” தொடர்ந்து வாசிக்க…)

தார்மீக வலுவிழந்த தமிழ் கபடதாரி அரசியல்!

தமிழ் அரசியல் என்பது யதார்த்தத்திற்கும் அதாவது தமிழ் அரசியல் வாதிகள் அவர்களின் இருப்பிற்கும் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் உரையாடல்கள் அவர்களது செயற்பாடுகள் சொந்த வாழ்க்கை நடைமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆகும். சுயநிர்ணயம் ,தேசம், தமிழர் தம்மைத்தாமே ஆள என வார்த்தை ஜாலங்கள் செய்வார்கள். சகல தேர்தல் கூட்டங்களிலும் ,அன்றாட நிகழ்வுகளிலும் ,பாராளுமன்றம், மாகாண சபைகளிலும் இந்த வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.

(“தார்மீக வலுவிழந்த தமிழ் கபடதாரி அரசியல்!” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பு யோசனைகள் தயார்!

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின் சமூக அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனை வரைபு விசேட அறிவோர் குழுவின் குழுவின் ஆரம்ப கட்ட பணிகள் பூர்த்தியாகிவிட்டன. இந்த குழு தயாரித்துள்ள வரைபு, கூட்டணியின் செயற்குழுவில் பரிசீலிக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவையில் முன் வைக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

(“அரசியலமைப்பு யோசனைகள் தயார்!” தொடர்ந்து வாசிக்க…)