மஹிந்த வருகையை எதிர்த்து சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்?

கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இன்று நடைபெறும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. தண்ணீருக்கு பதிலாக துப்பாக்கி தோட்டாவை வழங்கிய ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்து தட்டிகளை ஏந்தியுள்ள மக்கள், மகிந்த ராஜபக்ச தமது பிரதேசத்திற்கு வருகை தரக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சுத்தமான குடிநீர் கோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பாடசாலை மாணவன் உட்பட இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டீக்சித் யுகம் மீண்டும் திரும்புகின்றதா?

இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் டீக்சித் யுகம் மீண்டும் திரும்புகின்றதா என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை இந்தியாவிற்கு இடையிலான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஓத்துழைப்பை கூட்டு எதிர்கட்சியினர் எதிர்த்துவருவதை கடுமையாக விமர்சித்து இலங்கைக்கான இந்திய தூதுவர் வை கே சின்கா கருத்து வெளியிட்டுள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டு தூதுவர் ஓருவர் எதிர்கட்சியினரின் பணிகுறித்து இதுவரை கேள்வியெழுப்பியதில்லை, அவ்வாறு கேள்வி எழுப்பபடுவது இதுவே முதற்தடவை. இலங்கைக்கான இந்திய தூதுவராக பணியாற்றிய ஜேஎன் டீக்சித்த செயற்பட்ட விதம் குறித்து தற்போதைய சூழலில் மீண்டும் ஓரு முறை ஆராய்வது பயனுள்ளதாக அமையலாம்.

(“டீக்சித் யுகம் மீண்டும் திரும்புகின்றதா?” தொடர்ந்து வாசிக்க…)

பெண்களின் சட்ட உரிமைகள் செயல்வடிவத்தில் உருப்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள்! இளையோர் சக்தி அமைப்பு வேண்டுகோள்.

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவதில் அக்கறை செலுத்துமளவு பெண்களினுடைய உரிமைகளுக்கான செயல்வடிவத்தை பெற்றுக் கொடுப்பதில் கருசனைகாட்டப்படுவதில்லை என இளையோர் சக்தி அமைப்பின் தேசிய அமைப்பாளர் தவராசா தர்ஸன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அனுப்பிவைத்துள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் போரின் வடுக்களை சுமந்து அவற்றிலிருந்து மீண்டு எழுவதற்காக ஒவ்வொரு பெண்களும் தன்னை தயார்படுத்தி வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தின் உள்ளிருந்தே முன்னெடுக்கப்படுவது மிகுந்த கவலையளித்து வருகிறது.

(“பெண்களின் சட்ட உரிமைகள் செயல்வடிவத்தில் உருப்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள்! இளையோர் சக்தி அமைப்பு வேண்டுகோள்.” தொடர்ந்து வாசிக்க…)

வரைவுக்கு கருத்துக்களை வழங்க பேரவை அழைப்பு?!

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றதும், இதில் மக்கள் மிகவும் உட்சாகத்துடன் பங்குபற்றுவதும் மிகவும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள எங்கள் உறவுகளின் வகிபங்கு மிகவும் அவசியமானது.

(“வரைவுக்கு கருத்துக்களை வழங்க பேரவை அழைப்பு?!” தொடர்ந்து வாசிக்க…)

” நிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி” -ஒரு செய்தியாளரின் நேரடி அனுபவம்

 

ஆட்டோ டிரைவராக தனது பயணத்தை தொடங்கியவரின் கலை உணர்வுமிக்க ,மிமிக்ரி கலைஞனாக தன்னை இந்த சமூகத்துக்கு அடையாளம் காண்பித்தவர் கலாபவன் மணி. கிராமிய பாடல்கள்தான் இவரது முதல் அடையாளம். அதன் மூலம் மலையாளத் திரையுலகில் புகுந்து கையில் எடுக்காத வேடங்கள் கிடையாது. நடிப்பு மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

(“” நிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி” -ஒரு செய்தியாளரின் நேரடி அனுபவம்” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி19)

எமது போராளிகளின் வழக்கு நமக்கு சாதகமாக முடிந்தபின் மாணிக்கம் ராசன் கிளிநொச்சிக்கும்,சோலையன் செல்லப்பா பளைக்கும் இடம்பெயர்ந்தனர்.சேகரித்த நிதி தொடர்பான விவகாரம் கொஞ்சம் பகை முரண்பாடாக மாறியது.நடராசா தனக்கும் சார்பாக ஆட்பலம் கொண்டிருந்தார். இக் காலகட்டத்தில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசம் உச்சகட்டமான நிலையில் இருந்தது.இது தொடர்பாக மட்டுவில் மோகன்தாஸ் சனசமூக நிலையம், மானாவளை மக்கள் சகல இடத்து மக்களின் ஆதரவுகளை கோரியிருந்தனர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி19)” தொடர்ந்து வாசிக்க…)

‘சூளை மேட்டு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை’

தமிழ் நாட்டின் சூளை மேட்டில், 1986ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சூளைமேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான சென்னை செசன் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளி மூலமாக சமூகமளித்துவிட்டு வருகை தந்தபோது, ஊடகவியலாளர்கள் கேள்விகளை முன்வைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘சூளை மேட்டு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

தனி அலகு அத்தியாவசியமில்லை? ஹிஸ்புல்லா!

நாட்டை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்க வேண்டும் எனத்தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகயை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காகவே அவர்களால் இத்திட்டம் சூசகமாக போடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு மோதல்கள் ஏற்படுமே தவிர ஒருபோதும், அது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களுடன், வட மத்திய மாகாணத்தையும் இணைத்துக் கொண்டு ஒரு பிராந்தியமாக மாற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்குமா?

(“தனி அலகு அத்தியாவசியமில்லை? ஹிஸ்புல்லா!” தொடர்ந்து வாசிக்க…)

விளைவை அரசு எதிர்கொள்ள வேண்டிவரும்!?

அரசியல் தீர்வொன்றை கொண்டு வர இனிமேலும் அரசு தயக்கம் காட்டுமானால் அந்த விடயமானது அத்தோடு மரணித்துப் போகும் விடயமாக இருக்கப் போவதில்லை. பிரச்சினைகள் தொடரும். அதனுடைய விளைவுகளை நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டி வரும். இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

(“விளைவை அரசு எதிர்கொள்ள வேண்டிவரும்!?” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை!

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

(“உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை!” தொடர்ந்து வாசிக்க…)