தாம் வழங்கிய அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருந்தினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியாக ஆட்சி வகித்த காலத்தில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்ததாகவும் அதனை பிரபாகரன் நிராகத்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் பின்னர் வருந்தியுள்ளார் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார். லண்டனில் பணியாற்றிய அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று வரும் நபர் ஒருவரிடம் ‘பிரபாகரன், இவ்வாறு அரசியல் தீர்வுத் திட்த்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என வருந்தியுள்ளார் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
(“தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் வருந்தினார்?” தொடர்ந்து வாசிக்க…)