இரு யாழ் சட்டத்தரணிகள் மீது விசனம்!

ஹரிஸ்ணவி எனும் பதின்ம வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவ்வாறான கொலைகள் இனிமேலும் நடக்க கூடாது என்பதுடன் காமக் கொடூரர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காக குடாநாடு உட்பட வடபகுதி எங்கும் நேற்று ஹர்த்தால் நடாத்தப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் ஹர்த்தாலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணிகளும் இதில் பங்கு கொண்டு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் பிரபலமான கிரிமினல் வழக்குகளில் ஆஜராகின்ற இரு சட்டத்தரணிகள் மிகக் கேவலமான செயலை நேற்றுச் செய்து முடித்துள்ளனர். சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று இரு வழக்குகளுக்கு ஆஜராகி வட பகுதி மக்களின் உணர்வுகளை கேள்விக்குறியாக்கி உள்ளனர் யாழ்ப்பாணத்தில் உள்ள இரு கிரிமினல் சட்டத்தரணிகள்.

(“இரு யாழ் சட்டத்தரணிகள் மீது விசனம்!” தொடர்ந்து வாசிக்க…)

உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவயா?

பாவியள் எப்பிடி இருந்த மனுசனை இப்பிடி ஆக்கிப்போட்டு திரும்பவும் விடுறாங்கள் இல்லை. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை எண்டுற மாதிரி மகிந்தருக்கு சில வலக்கையள்.அதுகள் மகிந்தருக்கு தேங்காய் உடைச்சு ஆட்சி பிடிச்சு குடுக்கப் போகினமாம். என்னவொரு அறிவு. சும்மா சொல்லப்படாது. மகிந்தரைச் சுத்தி அப்பிடி அறிவான கூட்டம். கூட்டம் எண்டால் இரண்டு மூண்டு பேர்தான். ஆனால் பெரிய கூட்டம் மாதிரி சவுண்டு கேக்கும். ஆரால் கேடு, வாயால் கேடு எண்டுற மாதிரி. ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரிலை தேங்காய் உடைக்கப் போறம் எண்டுறினம். உடையுங்கோ! உடையுங்கோ! ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி எண்டுற கதைதான் மகிந்தருக்கு.

(“உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவயா?” தொடர்ந்து வாசிக்க…)

நாமல் ராஜபக்சவின் சட்ட நிறுவனத்தின் நிலை?

நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்சவின் என்.ஆர்.அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனம் இயங்கி வந்த கொழும்பு 5 கவர் வீதியில் இருக்கும் கட்டிடத்தை அதன் உரிமையாளர் மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளதால், நிறுவனத்தை நடத்தி செல்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கட்டிடத்தின் உரிமையாளர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனால், அச்சமடைந்த அந்த நபர், கட்டிடத்தை உடனடியாக தன்னிடம் ஒப்படைத்து விடுமாறு நாமல் ராஜபக்சவிடம் கோரியுள்ளார். இதனையடுத்து நிறுவனத்தின் அலுவலகத்தை அருகில் உள்ள இடம் ஒன்றுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், கட்டிடங்களின் உரிமையாளர்கள் எவரும் அதிகமான வாடகைக்கு கூட கட்டிடங்களை வழங்க மறுத்துள்ளனர்.

(“நாமல் ராஜபக்சவின் சட்ட நிறுவனத்தின் நிலை?” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது

படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தினார்.

(“வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம் – மந்துவில்(பகுதி 8)

எனது கிராமத்தில் மூன்று பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.பெரிய மந்துவில் ,கும்பாவெளி,கலட்டி ஆகிய பகுதிகளில் வாழ்கிறார்கள்.இப் போராட்டத்தில் தனியாக பெரிய மந்துவில் மட்டும் பங்கேற்றது.மற்றைய பகுதிகளில் சிலர் ஆதரவளித்தனர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம் – மந்துவில்(பகுதி 8)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளுக்கு எதிரான 5 வழக்குகளுக்கு ஏப்ரலுக்கு முன்னர் தீர்ப்பு

பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பில், அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் ஐந்து வழக்குகளின் தீர்ப்புகளையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் வழங்க அந்த நீதிமன்றத்தின் நீதிபதி கேமா சுவர்ணாதிபதி தீர்மானித்துள்ளார்.

(“புலிகளுக்கு எதிரான 5 வழக்குகளுக்கு ஏப்ரலுக்கு முன்னர் தீர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். பல்கலையில் மாணவர்கள் தாடி வளர்க்கத் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, நாளை 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமரன், நேற்று புதன்கிழமை (24) அறிவித்துள்ளார்.

(“யாழ். பல்கலையில் மாணவர்கள் தாடி வளர்க்கத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் பகுதிகளிலேயே அதிகளவு வறுமைநிலை!?

உலக வங்கியின் அண்மைய ஆய்வின் பிரகாரம், சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்கள் அதியுச்ச வறுமையின் பிடியில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் அதிக வறுமை நிலவுவதாக உலக வங்கியின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சிங்களவர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் வறுமையால் பாதிக்கப்படும் மாவட்டமாக மொனறாகல மட்டும் அடையாளங் காணப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தேசிய வறுமைக் கோட்டு வீதமானது நாளொன்றுக்கு 1.50 டொலர் வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், இதனுடன் ஒப்பீடு செய்யும் போது முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமை நிலையானது 28.8 சதவீதமாகவும், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் வறுமை நிலையானது முறையே 20.1 மற்றும் 12.7 சதவீதங்களாகக் காணப்படுகின்றன.

(“தமிழர் பகுதிகளிலேயே அதிகளவு வறுமைநிலை!?” தொடர்ந்து வாசிக்க…)

முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்!

வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடுர சம்பவத்துக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கியது. பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ்.வணிகர் கழகம் என்பனவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் மாத்திரம், மருந்துக்கடைகளும், உணவகங்களும், திறந்திருந்தன.

மட்டக்களப்பில் மகிந்த ஆட்சி!

நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னும் நல்லாட்சி ஏற்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்டம் நல்லாட்சி நிர்வாகத்தை கொண்டிருக்கவில்லை மட்டக்களப்பில் இப்போதும் மகிந்தராஜபக்சஸ அரசின் ஆட்சியே நடைபெறுவதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக மட்டக்களப்பில் அரச நிர்வாகம் சரியாக செயற்படவில்லை, அனைத்து நிர்வாகங்களிலும் அரசியல் தலையீடு காணப்படுவதாக வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு இதுகுறித்த கருத்துக்களை லங்காசிறியின் 24 மணிநேரச் செய்திச் சேவை பொதுமக்களிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் மேலும் கருத்துதெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதும் மகிந்தராஜபக்ஸவின் ஆட்சியே நடைபெறுகிறது. அரசநிர்வாகங்கள் அனைத்திலும் அமைச்சர்களின் நேரடித்தலையீடுகள் உண்டு.

(“மட்டக்களப்பில் மகிந்த ஆட்சி!” தொடர்ந்து வாசிக்க…)