சமஷ்டியால் பிரிந்துபோகமாட்டோம் – உரிமையைத் தந்தால் சேர்ந்து வாழ்வோம்!

சமஷ்டி முறையில் சிறுபான்மையினரின் உரிமைகளைக் கொடுத்தால் அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்று வட மகாணா முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார். சர்வதேசத்தில் சமஷ்டி ஆட்சி முறை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் பிரிந்து போகவில்லை என்றும், அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் மனதில் சமஷ்டி என்றால் பிரிவினை என்ற கருத்தினை விதைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

(“சமஷ்டியால் பிரிந்துபோகமாட்டோம் – உரிமையைத் தந்தால் சேர்ந்து வாழ்வோம்!” தொடர்ந்து வாசிக்க…)

மேடையிலிருந்த சுமந்திரனுக்கு அறிவுரை சொன்னார் வடக்கு முதலமைச்சர்!

வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதவியேற்பு வைபவத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இருவரும் மாறிமாறி அறிக்கைகள் விட்டு முரண்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு நிலையிலேயே நேற்று முன்தினம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

(“மேடையிலிருந்த சுமந்திரனுக்கு அறிவுரை சொன்னார் வடக்கு முதலமைச்சர்!” தொடர்ந்து வாசிக்க…)

வேலணையில் பல கோடி திருடிய ஈபிடிபி!

ஈபிடிபி குழுவினர் செய்துள்ள மாபெரும் ஊழல் / கடந்த ஜுலை 31 ம் திகதி வரைக்கும் ஈபிடிபி யீனரின் ஆளுகைக்குள் செயற்பட்ட வேலணை பிரதேச சபையினால்புங்குடுதீவு மு ற்றவெளி பகுதியில் இப்படத்தில் காணப்படும் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது . கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இவ்வாறான நிலையிலே காணப்படுகிறது பல கோடி பெறுமதியான மக்களின் வரிப்பணம் இக்கட்டடத்தினுள் முடக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு முதலாம் வட்டாரத்திலே வழமையான சந்தை காணப்படுகின்றது. அச்சுற்றுப்புற சூழலினை சந்தையடி என்றே காலாகாலமாக அழைப்பர் . இந்நிலையில் ஈபிடிபி தலைமையிலான வேலணை பிரதேச சபையினர் சிறிய மழைக்கே பல மாதங்கள் வெள்ளம் தங்ககூடிய முற்றவெளி பகுதியில் புதிய சந்தையொன்றினை அமைக்க முனைந்துள்ளனர்.

(“வேலணையில் பல கோடி திருடிய ஈபிடிபி!” தொடர்ந்து வாசிக்க…)

கையை உடைத்த பாவம் வேண்டாம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்திய பாவத்துக்கு உள்ளாகாமல், அரசியலிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கௌரவமாக விடைபெற வேண்டும் என மத்திய மாகாண பெருந்தெருக்கள், மின்சக்தி, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த வீரவர்தன, ‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒருபோதும் பிளவுபடாது. அதற்கு, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இடமளிக்க மாட்டார்.

(“கையை உடைத்த பாவம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 4)

இந்தப் போராட்டமானது பொது இடங்களில் சம உரிமைகோரி நடத்தப்பட்டது.தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகை தீர்க்க இல்லை.சாதிவெறியர்கள் பகை தீர்பதிலேயே குறியாக நின்றனர்.எமது கிராமங்களைச் சுற்றி பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர்.ஆனாலும் பங்குபெற முன்வரவில்லை.தார்மீக ரீதியாக பல பொருளாதார ஒத்துழைப்புகளை மானாவளை பகுதியினர் வழங்கினர்,.கொடிகாம்ம்,மிருசுவில்,வரணி, அல்லாரை, வேம்பிராய் போன்ற இடங்களில் அதிகமாக சிறுபான்மை தமிழர்கள் இருந்தும் ஆதரவளிக்க தயங்கினர்.இதேபோலவே சங்கானையிலும் நடந்தது.அங்கேயும் சங்கானை ஒரு பகுதியினர்,சண்டிலிப்பாய் போன்ற இடங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது.நிச்சாம்ம் மட்டும் தனியே களமாடியது.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயராத குட்டிகளாவது அனுபவிக்கட்டும்?

தமிழர் உணவு பார்த்தலே நாவூறுகிறது! புலம்பெயராத குட்டிகளாவது அனுபவிக்கட்டும்?

 

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளை சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது. பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். கறிகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரை, வறை, மசியல், மீன் கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம்,உள்ளி, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் கறிகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.

(“புலம்பெயராத குட்டிகளாவது அனுபவிக்கட்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

13ஐ ஆதரித்ததால் மூன்று தடவைகள் சுட்டப்பட்டார் வட மாகாண ஆளுனர்!

தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கு தான் பல தியாகங்களை செய்துள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார். வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டதுடன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது, எதிர் தரப்பிலிருந்து 13ஆம் திருத்தச்சடத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தமையினால் தன் மீது மூன்று தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த சம்பவங்களிலிருந்து தான் தப்பியதாகவும் கூறினார். அத்துடன் வடக்கில் சகல அவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என்றும், இதற்கான ஒப்பந்தங்கள் வடபகுதியிலுள்ளவர்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறினார். தனது அரசியல் வாழ்வின் இறுதி தருணங்களை வடபகுதி மக்களுடன் கழிக்க வேண்டும் என்று உறுதிகொண்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

மனநோய்!?

உங்களுக்கு, நான் மனநோய் பாதிப்பிற்கு ஆளான கதை தெரியுமா? ஆளைப்பார்த்தாலே தெரிகிறது என்கிறீர்களா? இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்பது. எனக்கு மனநோய் என்றதும், அது பற்றி அறிய ஆவலாய் இருப்பீர்கள். ஆனால், அந்த விடயத்தை, இக்கட்டுரையின் கடைசியிற்தான் சொல்லப்போகிறேன். அதற்கு முன்பாக சில விஷயங்கள். உலகம் முழுவதும் இன்று இளையோரைப் பாதிக்கும் நோய்களில் முக்கியமானதாக, ‘டிப்பிறசன்’ என்று சொல்லப்படுகின்ற மனஅழுத்த நோய் பெருகி வருகிறது. ஒழுக்கயீனம், அன்பின்மை, பேரதிர்வு, பெரும்மனச்சுமை போன்ற பல காரணங்களால், இந்நோய் உருவாகுவதாக விஞ்ஞான உலகம் கூறுகிறது.

(“மனநோய்!?” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் அமைப்பில் மலையகத்திற்கு தனியான அலகு வேண்டும்!

புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பில், மலையக மக்களுக்கான தனியான அலகும், தனி அடையாளமும் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் இரண்டாம் நாள் அமர்வு இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றது. இந்த அமர்வின் போதே மேற்குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் சுமார் 45 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் அரசியல் தொடர்பான கூடுதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை பெருந்தோட்ட துறையை சார்ந்த ஆசிரியர்கள், பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் சிலர் தமது யோசனைகளை வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குழுவினரிடம் கையளித்தனர்.

(“அரசியல் அமைப்பில் மலையகத்திற்கு தனியான அலகு வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

‘சிங்க லே’ உடம்பில் ஓடுவது கலப்பு இரத்தம்!

சிங்க லே என்று கூச்சலிடுபவர்களின் உடம்பில் ஒடுவது கலப்பு இரத்தம் என்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபையின் புதிய ஆளுனராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்ட அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கான வரவேற்புநிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் கலப்பு இரத்தம் கொண்டவர்கள் என்று கூறினார். சிங்க லே என்று கூறுவோரின் உடம்பில் கலப்பு இரத்தம் ஓடுவதாகவும் யாரும் ஒரு இன, ஜாதி, நாட்டு இரத்தத்துடன் இருப்பதில்லை என்றும் கூறினார். இந்தியாவிலிருந்து அரசி கொண்டு வருகின்றோம், தாய்வானிலிருந்து கருவாடு கொண்டு வருகின்றோம். அப்படி பார்த்தால் எமது உடம்பில் ஓடுவது சர்வதேச கலப்பு இரத்தமாகும் என்றும் கூறினார். ரெஜினால்ட் குரே. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சராகவும் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.