இயங்கா நிலையிலுள்ள திக்கம் வடிசாலையின் தொழிற்சாலையையும் புதர் மண்டிக் காணப்படும் வளாகத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார்வடமராட்சிக்கு நேற்றைய தினம் (18) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதன் ஒருகட்டமாக திக்கம் வடிசாலைக்குச் சென்று அதன் தற்போதைய நிலவரம் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் திக்கம் வடிசாலை மிகச் சிற்நத முறையில் இயங்கியிருந்த அதேவேளை அங்கு நூற்றுக்கணக்கான பணியாளர்களும் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது திக்கம் வடிசாலை கடந்த பல மாதங்களாக இயங்காத நிலையில் அங்கிருக்கும் தொழிற்துறை சார்ந்த உபகரணங்களும் ஏனைய உபகரணங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.
(“திக்கம் வடிசாலையை பார்வையிட்டார் டக்ளஸ்?” தொடர்ந்து வாசிக்க…)