தாயகத்தின் கிழக்கு பிரதேசத்தில் தியாகிகள் தினம்.

 

மட்டக்களப்பு அம்பாறையிலிருந்து மட்டும் அல்லாது திருகோணமலை வன்னி யாழ்ப்பாணம் என்று பல பிரதேசங்களிலிருந்தும் பத்மநாபா மக்கள் முன்னணியினர் கலந்து கொண்ட இந்த சிறப்பு நிகழ்வு தோழர் சந்திரன் தலமையில் நடைபெற்றது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் நேரடியாகவும் ஆதரவாளர்களாகவும் கலந்து கொண்ட இந்நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது. பல மதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இவ் நிகழ்வு கிழக்கில் மூவினம மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது மட்டும் அல்லாது போராட்டகாலத்தில் சந்தேகங்களுக்கு உள்ளான இன உறவுகளை மீண்டும் இறுக்கமாக கட்டியமைப்பதற்கான ஒரு அடையாளமாக பலராலும் பார்க்கப்படுகின்றது. ஆரம்ப கால ஈபிஆர்எல்எவ் இன் விடுதலைக்காக தம்மை அர்பணித்த தோழர்களின் குடுமப உறவுகள் தமது உறவுகளின் தியாகங்களை மீண்டும் மீண்டு நினைவு கூரும் கௌரவிக்கப்படும் ஒரு நிகழ்வாக இது பரிணாமம் அடைந்திருந்ததை கூட்டத்தின் இடையே அவதானிக்க கூடியதாக இருந்தது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் வரதராஜப்பெருமாளும் அக் கட்சியின் செயலாளர் தோழர் மோகன் அவர்களும் சிறப்புரையாற்றினர் தோழர் சுகுவின் வழி நடத்தில் இந் நிகழ்வு சிறப்பாக பத்மநாபா முன்னணியின் தோழர்களால் நடைபெற்று முடிந்திருக்கின்றது. (செய்திகள் தொடரும்…)

சென்னையில் தியாகிகள் தினம்.

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் என்று செயற்பட்ட நாங்கள் இந்த வருட ஆரம்பத்தில் யாழ்பாணத்தில் நடைபெற்ற பேராளர் மகாநாட்டில் எமது அமைப்பின் பெயர்களை பத்மநாபா மக்கள் முன்னணி என்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்றும் பெயர் மாற்றம் செய்தோம். வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட யதார்தங்களை கருத்தில் கொண்டு எமது மக்களின் விடிவிற்கான அரசியல் பாதையிற்கு தேவைப்படும் மாற்றத்தினை ஏற்படுத்hதியிருந்தோம் இந்த மகாநாட்டில். கடந்த 25 வருடங்களாக சென்னை புழல் முகாமில் தொடர்ந்தும் அகதிளாக வாழும் எமது மக்கள்இ தோழர்கள் வருடா வருடம் நினைவு கூரும் தியாகிகள் தின நிகழ்வும் இம்முறை தோழர் ஸ்ரானிஸ் தலமையில் நடைபெற்றது. தோழர் கல்யாசுந்தரத்தின் நினைவு நாளும் ஜுன் மாதம் 20 ம்திகதி நடைபெறுவதால் அவரின் வழிவந்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் இவ்நிகழ்வை இணைந்தே ஒழுங்கு செய்திருந்தனர் வணக்க நிகழ்வுடன் ஆரம்பித் இந்த நிகழ்வு ஈழவிடுதலைக்காவும் மனித குல விடுதலைக்காகவும் தம்மை அர்பணித்த போராளிகள் பொது மக்கள் மாற்று விடுதலை அமைப்பு போராளிகள் யாவருக்குமான ஒரு மரியாதை செலுத்தும் நிகழ்வாக நடைபெற்றது

வடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள் தினம்.

தோழர் பத்மநாபாவும் அவரது தோழர்களும் இந்தியாவில் வைத்து 1990ஆம் ஆcanadaண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டனர். அந்த கூட்டு படுகொலை இடம்பெற்ற ஜூன் மாதம் 19ஆம் திகதியை ஈழமக்கள்புரட்சிகர முன்னணியினர்(நாபா) அதாவது தற்போதைய தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர் தியாகிகள் தினமாக பிரகடனம் செய்து வருடாவருடம் நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.

(“வடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள் தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் சமூகத்தின் ஜனநாயகத்துக்காகவும் உழைக்கும் மக்களின் விடிவுக்காகவும் தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், சகோதர இயக்கப் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூரு முகமாக “தியாகிகள் தினம்” – 2016க்கான நிகழ்வுகள் இம்முறை மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.

(தொடர்ந்து வாசிக்க…)

பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!

 

ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார்.

(“பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்.நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு

மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச்சிலை யாழ். பொதுநூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.அன்னாரின் உருவச்சிலையினை இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். யாழ்.பொதுநூலக வளாகத்தில் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை அவைத் தலைவர்.

(“யாழ்.நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கத்துக்கு 6 வேண்டுமா, 2 வேண்டுமா: திகா கேள்வி

தேசிய அரசாங்கத்துக்கு, மலையகத்தின் சார்பில் ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அறுவர் வேண்டுமா அல்லது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுமா என, தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

(“அரசாங்கத்துக்கு 6 வேண்டுமா, 2 வேண்டுமா: திகா கேள்வி” தொடர்ந்து வாசிக்க…)