தோழர் பத்மநாபா கொலையின் முக்கிய சூத்திரதாரி திருச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்
பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )
பற்குணம் தன் பதவி என்ற எல்லைக்கு அப்பால் சென்றும் அராஜகத்துடன் மோதியவர்.அன்றைய நாட்களில் பற்குணத்துடன் சமகாலத்தில். பல்கலைக் கழகத்தில் படித்த பொன்னையா,கணேசபிள்ளை,சின்னராசா ஆகியோர் வேலை கிடைக்காத காரணத்தால் ப.நோ.கூ சங்க பொது முகாமையாளர்களாக பணிபுரிந்தனர்.பொன்னையா குச்சவெளி (இவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் உறவினர்)சின்னராசா தம்பலகாமம்- இவரின் சொந்த ஊரும் அதுவே.அடுத்தது கணேசபிள்ளை கந்தளாய்.
‘ஒருத்தனுக்கு ஒருத்தி’: பொய்யாக்கும் தலங்கம கலாசாரம் வேண்டாம்
(மேனகா மூக்காண்டி)
இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கையைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கென்ற கலை, கலாசா, பண்பாடு, மற்றும் ஒழுக்கங்கள் போன்ற தனித்துவமாகக் காணப்படுகின்றன. அந்தத் தனித்துவத்தை, காலாகாலத்துக்கு பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. ஒருவரின் நடத்தை, ஒழுக்கம், செயற்பாடுகள், நடை – உடை – பாவனை அனைத்துமே, இவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர், இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பறைசாற்றிவிடுகின்றது. எனவே, நாம் ஓரிடத்தில் ஏதேனும் தவறை இழைத்துவிட்டால், அது எமது சமூகத்தையே பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை எந்நேரமும் கருத்திற்கொண்டிருத்தல் வேண்டும்.
(“‘ஒருத்தனுக்கு ஒருத்தி’: பொய்யாக்கும் தலங்கம கலாசாரம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)
புளோரிடா தாக்குதல் தொடர்பாக தாக்குதலாளியின் மனைவிக்குத் தெரிந்திருந்தது
அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஒர்லான்டோ பகுதியிலுள்ள சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக, அந்தத் தாக்குதலை மேற்கொண்டவரின் தற்போதைய மனைவிக்குத் தெரிந்திருந்ததாக, அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக, ஓமர் மட்டீனின் மனைவியான நூர் சல்மான் மீது, இன்றைய தினமே வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் அறிவிக்கப்படுகிறது.
(“புளோரிடா தாக்குதல் தொடர்பாக தாக்குதலாளியின் மனைவிக்குத் தெரிந்திருந்தது” தொடர்ந்து வாசிக்க…)
ஜே.வி.பி. முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்.
ஜே.வி.பி. முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க 74 வது வயதில் காலமானார். “ஜேவிபி யின் முள்ளிவாய்க்கால்” என்று சொல்லக் கூடிய, 1989 – 1991 படுகொலைகளில் இருந்து உயிர் தப்பி இந்தியா சென்று, பின்னர் அங்கிருந்து பிரிட்டன் சென்று அகதித் தஞ்சம் கோரி இருந்தார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில், ஜே.வி.பி. முற்றாக அழித்தொழிக்கப் பட்ட நிலையில், உதிரிகளாக இருந்த கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து கட்சியை மீண்டும் கட்டியெழுப்பியதில், சோமவன்சவின் பங்கு கணிசமான அளவு இருந்துள்ளது.
(“ஜே.வி.பி. முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்.” தொடர்ந்து வாசிக்க…)
தோழர் றொபேட்டின் மக்கள் பணிகளை நெஞ்சினில் சுமப்போம்!
(தோழர் ஜேம்ஸ்)
இன்று தோழர் றொபேட்டின் 13 வது நினைவு தினம். ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் மக்களின்; சமாதான சகவாழ்வை உறுதிப்படுத்துவதற்காகவும் தனது உயிரை அர்பணித்த ஒரு போராளியின் நினைவுநாள் இன்று. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்த றொபேட்டின் அரசியல் காரியாலயத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் மாணவர் விடுதியில் பதுங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிப் பாசிஸ்ட்களின் கோழைத்தனமான சினைப்பர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்தார். இது நடைபெற்றது ஜுன் 14, 2003 ஆண்டு. 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரபாகரனுக்கும் ரணில் விக்கரமசிங்காவிற்கும் இடையே நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கைப் படி தோழர் றொபேட் கொலை செய்யப்பட்ட காலகட்டத்திலும் போர் நிறுத்தமும், ஸ்கண்டிநேவியன் நாடுகளின் சர்சதேசக் கண்காணிப்பு குழுவும் தமிழ் பிரதேசங்கள் எங்கும் செயற்பாட்டிலிருந்த வேளையிலேயே இப் படுகொலை நடைபெற்றுள்ளது.
(“தோழர் றொபேட்டின் மக்கள் பணிகளை நெஞ்சினில் சுமப்போம்!” தொடர்ந்து வாசிக்க…)
சி.வியும் சிங்கள மொழியும்
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மாணவர்களிடம் மிக முக்கியமானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளார். தாம் செய்ததைப் போல், சிங்கள மொழியைக் கற்காதிருக்க வேண்டாம் என அவர் கேட்டுள்ளார். யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை கலைமகள் திருவுருவச் சிலை திறப்பு விழா, கடந்த வாரம் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தோழர் சுபத்திரன் (றொபேட்) அவர்களுக்கு தோழர்கள் அஞ்சலி.
யாழ்ப்பாத்தில் உள்ள பத்மநாபா மக்கள் முன்னணி அலுவகத்தில் இன்று (14.06.2016) காலை 11 மணியளவில் தோழர் சிறிதரன் தலைமையில் தோழர் சுபத்திரனுக்கு(றொபேட்) தோழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
தோழர் றொபேட் புதிய அரசியல் பண்பாட்டின் முன் உதாரணம்
நோர்வே அரசின் மத்தியஸ்தத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்;படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் நோர்வே தலைமையிலான போர் நிறுத்த கண்காணிப்புக் குழு செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தோழர் றொபேட் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆயுதங்களை வைத்திருப்பதும், பாவிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நியதிகளுக்குப் புறம்பாக பாடசாலை வகுப்பறையில் மறைந்திருந்த புலிகளின் து;பபாக்கிதாரியால் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிவீதியில் இயங்கிவந்த ஈபிஆர்எல்எவ் அலுவலகத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோழர் றொபேட் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டது.
(“தோழர் றொபேட் புதிய அரசியல் பண்பாட்டின் முன் உதாரணம்” தொடர்ந்து வாசிக்க…)