நீங்கள் செய்த பாவத்தினையே நாங்கள் கழுவுகின்றோம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு எந்தவொரு அழுத்தங்களோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலர் ஊடகங்களுக்கு பலவாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்கள் செய்த பாவங்களையே தற்போது கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சயிட் அல் ஹூசெய்ன் வடக்கு கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி அடைந்துள்ளார்.

(“நீங்கள் செய்த பாவத்தினையே நாங்கள் கழுவுகின்றோம்!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய கட்சி அமைக்கும் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்!

புதிய கட்சியை அமைக்கும் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய கட்சியில் இணைந்து கொள்ளும் தரப்பினர் தராதரம் பாராது கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு நாங்கள் தான் உண்மையான சுதந்திரக் கட்சிக்காரர்கள் என கூறிக்கொண்டு கட்சியை பலவீனப்படுத்த தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(“புதிய கட்சி அமைக்கும் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்!” தொடர்ந்து வாசிக்க…)

எமில்காந்தனின் சர்வதேச பயணத் தடையை நீக்க நீதி மன்றம் மறுப்பு!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் எமில்காந்தனுக்கு எதிரான சர்வதேச பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. எமில்காந்தனுக்கு எதிரான தடையை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டே நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ராடா நிறுவனம் சுனாமி வீடமைப்பு திட்டதத்தினை முன்னெடுப்பதாகக் கூறி 168 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாகவும் இந்த மோசடிகளுடன் எமில்காந்தனுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எமில்காந்தன் தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நீதிமன்றில் ஆஜராக திட்டமிட்டுள்ளதாகவும், இலங்கை நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடையை நீக்குமாறும் எமில்காந்தனின் சட்டத்தரணிகள் நேற்றைய தினம்கோரியிருந்தனர். எனினும் இந்தக் கோரிக்கையை

தமிழில் தேசிய கீதம் பண்டிகை இனிப்பாக இருக்க கூடாது, மனோ கணேசன்!

தமிழில் தேசிய கீதம் என்பது தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பண்டிகைக்கால இனிப்பாக இருந்து கூடாது என்றும், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மெய்சிலிர்த்து, கண்கலங்கி, அகம் மகிழ்ந்து விடவில்லை எனவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் தொழில் புரிந்து வாழும் இலங்கை பணியார்களுக்காக விசேடமாக நடத்தப்பட்ட நேரடி தொலைகாட்சி ஒளிபரப்பில், கலந்துகொண்டு சிங்கள மொழியில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

(“தமிழில் தேசிய கீதம் பண்டிகை இனிப்பாக இருக்க கூடாது, மனோ கணேசன்!” தொடர்ந்து வாசிக்க…)

மின்சார நாற்காலிக்கு சென்றவர்களை எமது அரசாங்கம் காப்பாற்றியுள்ளது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயருடன் செய்து கொள்ளப்பட்ட மேல் நாட்டு உடன்படிக்கை பற்றி தெரிந்தா பேசுகிறார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வந்த யோசனைக்கு இலங்கை ஆதரவு வழங்கியமையானது 1815 ஆம் ஆண்டு மேல் நாட்டு உடன்படிக்கைக்கு இணையானது என மகிந்த ராஜபக்ச அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல போகின்றனர் என்று கதறியவர்களை எமது அரசாங்கமே காப்பாற்றியது எனக் கூறியுள்ளார்.

காட்டுப்பகுதியில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை, மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகள், நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை மீட்டுள்ளனர். மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் மது வரி நிலைய சாஜன் வி.திருச்செல்வம், மது வரி நிலைய காவலாளி எஸ்.விதுசன், மது வரி திணைக்களத்தின் சாரதி ஏ.ஜே.பீரிஸ் மற்றும் சிலாபத்துறை கடற்படையினர் ஆகியோர் இணைந்து குறித்த கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.

(“காட்டுப்பகுதியில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு” தொடர்ந்து வாசிக்க…)

இனவாதத்திற்கு எதிரான போராட்டம்.

 

இனவாத “சிங்கள இரத்தம்” என்னும் அமைப்புக்கு எதிராக தெற்கில் “நாம் இலங்கையர்” மற்றும் “அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்” இணைந்து இனவாதத்திற்கு எதிரான போராட்டம். துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டி மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்திற்கு எதிரான பாரிய பிரச்சாரம்

இன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.

 

தோழர்கள் மா.சீவரத்தினம், க.செல்வராசா, கி.வேலும்மையிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிர்களை1970.02.12 ஆகுதி ஆக்கி சாகாவரம் கொண்ட நாள். அவர்களுக்கு என் வணக்கம். 18 மாசி 1968 தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் முன்னணி போராளி மந்துவில் இரத்தினம் காட்டிக்கொடுக்கப்பட்டு சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார்.இவரை தானே கொலை செய்ததாக புழுகி அச்சுவேலி தவராசன் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டான். அச்சுவேலி தவராசன் ஆண்டுகள் ஞாகம் இல்லை அச்சுவேலியில் வெட்டிச்சாய்கப்பட்டு கொலை செய்யப்பட்டான் 1968/ 69 என்ற நினைக்கின்றேன். எனது அறியாப் பருவம் அது.

(“இன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

தென்பகுதி அரசியலில் குழப்பத்தால் சம்பந்தன் ஜாயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போகுமா?

2016ஆம் ஆண்டில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் நம்பியிருக்கும் வேளையில், தென்பகுதி அரசியலில் குழப்பங்களும் குத்துக்கரணங்களும் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் முடிவு தனக்குத் தோல்வியாக அமைந்தபோது ஆட்சி அதிகாரத்தை கைவிட்டுப் போக மனம் இல்லாதிருந்த மகிந்த ராஜபக்­சவை வீட்டுக்கு அனுப்பி வைத்து ஆட்சிபீடத்தைத் கைப்பற்றுவதில் தற்போதைய அரசு மிகவும் கவனமாக நடந்து கொண்டது. ஆ… ஊ… என்று சத்தம் வைக்காமல் அப்பு! ராசா என்ற அணுகுமுறைக்கூடாக மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார்.

(“தென்பகுதி அரசியலில் குழப்பத்தால் சம்பந்தன் ஜாயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போகுமா?” தொடர்ந்து வாசிக்க…)

நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி!

விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ் செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களை முந்தி செல்ல முயற்சி எடுக்கும் நடத்துநர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்படுவார்கள் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

(“நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி!” தொடர்ந்து வாசிக்க…)