தாயோடு கல்வி போயிற்று!

உங்களிடம் ஒரு கேள்வி ஒரு குடும்பத்தில் இன்னின்னார்க்கு இன்னின்ன பொறுப்பு என, வகுக்கத்தலைப்பட்ட நம் மூதாதையர்கள், தாய்க்கும், தந்தைக்கும். என்னென்ன பொறுப்புக்களை வகுத்திருக்கிறார்கள் என்று, உங்களுக்குத் தெரியுமா? ஏன் பிரச்சினை நானே சொல்லிவிடுகிறேன்! அவர்கள் வகுத்த முறையின்படி, பிள்ளைகளை உணவு முதலியவற்றால் காக்கும் பொறுப்பு தாய்க்குரியது. அறிவு தந்து காக்கும் பொறுப்பு தந்தைக்குரியது. இதனைத்தான், ‘தந்தையோடு கல்விபோம். தாயோடு அறுசுவை உண்டி போம்’ என்றும், ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்றும், நம் தமிழ் இலக்கியங்கள் பேசின. இங்ஙனம் வகுத்தது ஏன் என்கிறீர்களா? சொல்கிறேன்.

(“தாயோடு கல்வி போயிற்று!” தொடர்ந்து வாசிக்க…)

சான்டர்ஸ், ட்ரம்ப்: புதிய அத்தியாயம்?

இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், பல்வேறு விதமான சுவாரசியமான விடயங்களைத் தந்துள்ளது, இனியும் தொடர்ந்து தரவுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முன்னைய காலங்களை விட, மாபெரும் மாற்றமொன்றை, அந்த அரசியல் களம் கொண்டிருக்கிறது. கட்சிகளின் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக இடம்பெற்று, நேற்று முடிவுகள் வெளிவந்த நியூ ஹம்ப்ஷையர் முதன்மைத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பேர்ணி சான்டர்ஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிகள், ஓரளவு எதிர்பார்க்கப்பட்டவை தான் என்றாலும், இவர்களிருவருக்கும் முக்கியமான வெற்றிகளாக அமைந்துள்ளன.

(“சான்டர்ஸ், ட்ரம்ப்: புதிய அத்தியாயம்?” தொடர்ந்து வாசிக்க…)

ஜே.வி.பி யின் யாழ். பிரதான அலுவலகம் திறப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட பிரதான அலுவலகம், கண்டி வீதியில் நாளை சனிக்கிழமை (13) திறந்து வைக்கப்படவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைப்பார்.

நல்லிணக்க பொறிமுறைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(12) வெள்ளிக்கிழமை இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை வெளிவிகார அமைச்சின் எற்பாட்டில் இது நடைபெற்றது. வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹொட்டியாரட்சி ஆகியோர் தலைமையில் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

(“நல்லிணக்க பொறிமுறைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம்!

இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். நீண்டகால தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் பதில் காணும் விடயத்தில் இம்மாற்றங்கள் எந்தளவு ஆழம் மிக்கவையாய் அமைந்துள்ளன? மாறிவந்த அரசாங்கங்கள் மீதும் ஏன் இலங்கை அரசு மீதும் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள சரித்திரபூர்வ நம்பிக்கையீனத்தைக் கருத்திலெடுக்கையில், இதுபோன்ற கேள்விகள் முற்றிலும் நியாயமானவையே. ஆயினும், இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை நிதானமாய் அலசிப் பார்க்கையில், அங்கு இடம்பெறும் மாற்றத்தின் அடிநாதம், அதை வழிநடத்தும் மனோநிலை என்பவற்றை நாம் இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது. அதேவேளையில், சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் குறிப்பிடத்தக்க அளவு மாறிவிட்டதும், அரும்புகின்ற மாற்றங்களை ஊக்குவித்துக் காப்பதற்கு உயர்மட்ட முயற்சிகளை அது தொடங்கியுள்ளதும் முக்கியமாக நோக்கப்பட வேண்டியவை. அரசியல் கருவியாக சர்வதேச ஆதரவில் பெருமளவில் தங்கியுள்ள ஒரு சமூகம் இவ் உண்மைகளை நன்கு உணர்ந்திருத்தல் அவசியம்.

(“தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

வீதி ஒழுங்கை மீறிய வடக்கு முதல்வர்!

யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் சிலநாட்களின் முன் தெரிவித்துள்ள அதே வேளை, முதலமைச்சர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து சென்ற சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றது.

(“வீதி ஒழுங்கை மீறிய வடக்கு முதல்வர்!” தொடர்ந்து வாசிக்க…)

கருணா அணிக்கு அஞ்சியே மாறி மாறிச் சாட்சியமளித்தேன்

கருணா அணியின் அழுத்தம் காரணமாகவே, பொலிஸாரிடம் தான், மாற்றி மாற்றி வாக்குமூலம் கொடுத்ததாக, யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியான டப்ளியு.எம்.எம்.சஞ்சய பிரித் விராஜ் தெரிவித்தார். இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயின் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

(“கருணா அணிக்கு அஞ்சியே மாறி மாறிச் சாட்சியமளித்தேன்” தொடர்ந்து வாசிக்க…)

பொதுபலசேனா ஞானசார தேரருக்கு தொடரும் மறியல்?

ஊடகவியலாளர் பிரகீத் என்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரை எதிர்வரும் 16ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க, நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். எக்னெலிகொட காணாமல்போன வழக்கில், சந்தியா என்னெலிகொட சாட்சியாளர் ஆவார். குற்றவியல் ஏற்பாடுகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று, பாதிக்கப்பட்ட (சந்தியா எக்னெலிகொட) தரப்பின் சட்டத்தரணி கூறினார்.

(“பொதுபலசேனா ஞானசார தேரருக்கு தொடரும் மறியல்?” தொடர்ந்து வாசிக்க…)

புத்திர சோகத்தில் நீதிமன்ற வாசலில் காத்திருந்த மகிந்த!!!

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச இன்று மீண்டும் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, அவரை வரும் பெப்ரவரி 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ச உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் காலாவதியான நிலையிலேயே, இன்று காலை அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். சிறைச்சாலைப் பேருந்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில், யோசித ராஜபக்ச, கொண்டு வரப்பட்ட போது நீதிமன்றத்தில் அவரது தந்தையான மகிந்த ராஜபக்ச, உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் குவிந்திருந்தனர்.

(“புத்திர சோகத்தில் நீதிமன்ற வாசலில் காத்திருந்த மகிந்த!!!” தொடர்ந்து வாசிக்க…)

பொது சந்தை போலான வட மாகாணசபை பேரவை கூட்டம்!

2013ல் மலர்ந்தது தமிழர் அரசு என்ற பத்திரிகை தலையங்கத்தை பார்த்து இது சற்று அதிகப் பிரசிங்கதனம் என நினைத்தாலும், மாற்றம் வரும் என நம்பியவர்களில் நானும் ஒருவன். காரணம் எனது சொந்த விஜயமாக நாட்டில் அதுவும் வடக்கில் நின்றபோது போது தான், வட மாகாணசபபை தேர்தல் நடந்தது. கூட்டமைப்பில் இணைத்து கொள்ளப்பட்ட புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வவுனியா நகரசபை தலைவர் லிங்கநாதன் போன்றவர்கள், வேட்பாளராக போட்டியிட களம் இறங்கிய அந்த தேர்தலில் மிக பெரிய வெற்றியை த.தே.கூ பெறும் என அப்போதே தெரிந்திருந்தது. பண்ணாகத்தில் கோவில் முன்றலில் நடந்த கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமித்து மேடையில் இருந்ததை பார்த்தபோது சாதிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் துளிர்விட்டது. ஆனால் அண்மைய நிகழ்வுகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் நடத்திய கூட்டுப்பொறுப்பு என்ற போர்வையில் விட்ட தவறுகள் இன்று வெட்ட வெளிச்சமாகின்றன.

(“பொது சந்தை போலான வட மாகாணசபை பேரவை கூட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)