ஆளுநரும் புது சர்ச்சையும்

(மொஹமட் பாதுஷா)

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஒரு தரப்பும், அதனை ஒத்திவைப்பதற்கு இன்னுமொரு தரப்பும் பகீரத பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றமை கண்கூடு.   எது எவ்வாறிருப்பினும் மிகக் கிட்டிய காலமொன்றில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய நிலை வரும் என்ற அடிப்படையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நகர்வுகளையும் சமகாலத்தில் சிறிய, பெரிய அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.