அந்த வகையில் வவுனியாவிலும் பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வவுனியாவில் பொது வைத்தியசாலைக்கு ஹெப்பிட்டிகொல்லாவ, பதவியா, உட்பட தூர இடங்களில் இருந்து வரும் 600க்கு மேற்பட்ட நோயாளிகள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பி செல்வது அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கு 600க்கு மேற்பட்ட நோயாளிகள் உட்பட மொத்தமாக 1000 பேர் வரை நாளாந்தம் மருத்துவ தேவைக்காக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.